இனி மாஸ்க், தனிமனித இடைவெளி என எந்த கட்டுப்பாடும் இல்லை.. போரிஸ் ஜான்சன் சாதித்து காட்டியது எப்படி
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு முழுவதுமாக கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, அங்கு மாஸ்க், தனிமனித இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையிலும் சரி, இரண்டாம் அலையிலும் சரி மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரிட்டன். பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனா அங்கு இரண்டாம் அலையை ஏற்படுத்தியது.
இதனால் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில நாட்களுக்கு முன் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.

பிரிட்டன்
அம்மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியதுடன் நின்றுவிடவில்லை. வேக்சின் பணிகளையும் தீவிரப்படுத்தியது. உலகிலேயே கொரோனா வேக்சின் பணிகளை முதலில் தொடங்கிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையானது. இதற்காக பைசர், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி உள்ளிட்ட பல வேக்சின்களுக்கு அங்கு அனுமதி தரப்பட்டுள்ளன. முறையான திட்டமிடலுக்குப் பிறகு படிப்படியாக அங்கு வேக்சின் பணிகள் நடைபெறுகிறது.

ஊரடங்கு வாபஸ்
இப்படி போரிஸ் ஜான்சன் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் காரணமாக வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கை வாபஸ் பெறுவதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த உத்தரவுகள் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்து. கல்விக் கூடங்கள் திறப்பு பற்றி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாஸ்க் கட்டாயமில்லை
பிரிட்டன் நாட்டில் இனி பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. இன்னும் சில காலம் அரசு மாஸ்க் அணிவதை அந்நாட்டு அரசு பரிந்துரைத்தாலும் மாஸ்க் அணிவது ஒருவரின் சொந்த விருப்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விடுதிகள், நைட் கிளப்கள் உள்ளிட்டவை எந்தவொரு கட்டுப்பாடுமின்றி செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி
தனிமனித இடைவெளி கட்டாயம் என்ற அறிவிப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி ஒரே இடத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் மீட் செய்யலாம். திருமணம், இறுதிச்சடங்கு என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தளர்வுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோல அதிகளவிலான மக்கள் பங்கேற்புடன் பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போக்குவரத்து
சில குறிப்பிட்ட நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அவர்கள் முழுவதுமாக 2 டோஸ் வேக்சின் செலுத்திக் கொண்டிருந்தால் அவர்களுக்குத் தனிமைப்படுத்தும் விதிகளிலிருந்து விலக்கு அளிப்பது குறித்தும் இறுதி முடிவு சில நாட்களில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயம் வீடுகளிலிருந்து வேலை செய்யும் WORK FROM HOME முறையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள்
மேலும், 40 வயதுக்குக் குறைவானவர்கள் வேக்சின் பணிகள் வேகப்படுத்தப்படும். இரண்டு டோஸ்களுக்கு இடைப்பட்ட காலம் 12 வாரங்களில் இருந்து எட்டு வாரங்களாகக் குறைக்கப்படும். அதேபோல வரும் செப்டம்பர் மாதம் வரை கொரோனா பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படும். அதேநேரம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications