Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்கல்லாம் மனுஷங்களாயா? நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு போன பெண்! மயக்க மருத்தைக் கொடுத்து.. உபி ஷாக்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ : பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவரும் அவரது உதவியாளரும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தாலும் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் தான் வன்கொடுமை சம்பவங்களில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் தான் பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

உபியில் ஷாக்

உபியில் ஷாக்

கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்புவதும் வணங்குவதும் மருத்துவர்களை தான் அப்படி ஒரு மருத்துவரை நம்பி மருத்துவமனைக்கு நெஞ்சுவலி என சிகிச்சை பெற வேண்டும் பெண்ணை மருத்துவர் அவரது உதவியாளரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள மகாநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

மயக்க மருந்து

மயக்க மருந்து

இதை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அந்த பெண்ணே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது அவரை சோதித்த மருத்துவர் மருந்து தருவதாக கூறி மயக்க மருந்தை கொடுத்திருக்கின்றனர். இதனால் அந்த சிறிது நேரத்திலேயே பெண் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரும் அவரது உதவியாளரும் தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

பெண் பலாத்காரம்

பெண் பலாத்காரம்

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதை அடுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மகாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அரசு மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் உதவியாளரை கைது செய்திருக்கின்றனர்.

பாஜக அரசு

பாஜக அரசு

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்ணை மயக்க மருந்து கொடுத்து மருத்துவரே பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடைய உத்திரபிரதேசத்தில் பாஜக அரசு போலியான வாக்குறுதிகளையும் என்கவுண்டர்களையும் நடத்துவதில் காட்டும் கவனத்தை பெண்களை பாதுகாப்பதில் செலுத்த தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் யோகி ஆதித்யநாத் அரசுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+