இந்து ஓட்டுக்களைப் பிரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் - உபி. பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
லக்னோ: கோவா மாநிலத்தில் இந்து வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவை மீண்டும் வெற்றி பெறச்செய்து, ஆட்சியில் அமர்த்த பாஜக தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், '' கோவாவில் இந்து வாக்குகளை பிரிக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதை அக்கட்சியே வெளிப்படையாக கூறியுள்ளது. திரிணாமுல் கூறியதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கோவா
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. கோவா அரசின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளது. புதிய அரசைத் தேர்ந்தெடுக்க இன்று கோவாவில் தேர்தல் நடக்கிறது. கோவாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இதுவரை போட்டி இருந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கோவா தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

திரிணாமுல்
இந்த பாஜக அரசு ஆட்சியில் அமர ஆதரவளித்த மாநில கட்சியுடன் திரிணாமுல் கட்சி கூட்டணியில் இருக்கிரது. இதனால் குறிப்பிட்ட சில இடங்களை திரிணாமுல் கட்சி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவின் கட்சிப் பொறுப்பாளரான திரிணாமுலின் மஹுவா மொய்த்ரா, சுதின் தவாலிகர் தலைமையிலான மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி அல்லது எம்ஜிபி உடனான கூட்டணி கடலோர மாநிலத்தில் இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதைத் தடுக்கும் என்று கூறியிருந்தார்.

இந்து ஓட்டுகள்
திரிணாமுல் கட்சிப் பொறுப்பாளர் இந்து ஓட்டுகள் குறித்துப் பேசியதும், பாஜக அதை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில்தான் பிரதமர் மோடி, இந்து ஓட்டுகள் குறித்து பேசியதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோவாவில் கூட்டணியின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காது என்று திரிணாமுல் கட்சியின் கூட்டணி தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி
கான்பூர் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உத்தரபிரதேசத்தை இரவும் பகலும் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார். இவர்கள் மாஃபியாக்களுக்கு உதவி செய்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு மாநிலத்தின் பகுதிகளை விநியோகம் செய்தனர். அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், மாநிலம் முழுவதும் மாஃபியாக்கள் வந்திருப்பார்கள்'' என்று பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications