"எனது மரணத்திற்காக பிரார்த்தனை.. இதை கேட்டு நான் என்ன செய்தேன் தெரியுமா" பிரதமர் மோடி உருக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்றுடன் அங்கு 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் மார்ச் 3ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
வடகிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி
அதன்படி இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேரடியாகப் பிரசாரம் செய்தார். வாரணாசியில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். முன்னதாக பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "சில அரசியல் எதிரிகள் எனது மரணத்திற்கான பிரார்த்தனை செய்துள்ளனர். நமது அரசியலில் உள்ள சிலர் எந்தளவு தாழ்ந்து சென்றுவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

மகிழ்ந்தேன்
ஆனால் எனது மரணத்திற்காக அவர்கள் காசியில் பிரார்த்தனை செய்தார்கள் என் செய்தியைக் கேட்டு நான் மகிழ்ச்சியே அடைந்தேன். நான் சாகும் வரை காசியை விட்டு வெளியே போக மாட்டேன். அல்லது இதன் மக்கள் கடைசி வரை என்னை விட்டுச் செல்லமாட்டார்கள்" என்று அவர் பேசினார். பிரதமர் மோடி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை சாடும் வகையிலேயே இப்படிப் பேசியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஏனென்றால், தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உபி-இல் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார்.

அகிலேஷ் யாதவ்
இதை விமர்சித்த அகிலேஷ் யாதவ், "நல்ல விஷயம் தான். அவர்கள் ஒரு மாதம் மட்டுமல்ல, எத்தனை மாதங்கள் கூட அங்கே தங்கலாம். மக்கள். தங்கள் கடைசி நாட்களை வாரணாசியில் கழிக்க வேண்டும் என்று பொதுவான ஒரு பழமொழி உள்ளது" என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்தைக் குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

வாரணாசி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 முதல் வாரணாசியில் தொகுதியில் தான் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வாரணாசியில் மார்ச் 7 ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாரணாசி மக்களவை தொகுதியில் வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கண்டோன்மென்ட், சேவாபுரி மற்றும் ரோஹனியா என மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில், அப்னா தளம் (சோனேலால்) என்ற கட்சி ஒரு இடத்திலும், பாஜக மீதமுள்ள 4 இடங்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அட்டாக்
முன்னதாக இன்றைய தினம் வாரணாசியில் பாஜக பூத் முகவர்களுடன் உரையாடும் போது பிரதமர் மோடி, சமாஜ்வாடி கட்சியைச் சாடினார். அகிலேஷ் ஆட்சியில் பயங்கரவாதிகள் எந்த அச்சமும் வெளியே சுற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி தலைவர்கள் ஒசாமா போன்ற பயங்கரவாதிகளைக் கூட ஜி என்று அழைப்பவர்கள் என்றும் சாடினார், 7 கட்டங்களாக நடைபெறும் உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளனர்.
-
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications