விரைவில் அதிமுகவிற்கு பெண் தலைமை வரும்.. அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு!
மதுரை: விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில், அ.தி.மு.க. மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். 'குழந்தைகளுக்கு தாயின் இன்ஷியலையும், பயன்படுத்தலாம் என புரட்சி செய்தவர் ஜெயலலிதா.
[சென்னை, கோவையில் மின்சார பஸ்கள் அறிமுகம்.. அமைச்சர் வேலுமணி தகவல்]

சாதிக்கும் காலம்
இது போன்று மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
எதிர்காலத்தில் நிச்சயமாக பெண்கள் சாதிக்கும் காலம் வரும். இயக்கத்தை வழிநடத்த பெண்கள் வருவார்கள்.

எதிர்காலத்தில் வாய்ப்பு
விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும். பெண்களும் ஆண்களை போன்று தேர்தல் காலத்தில் இணைந்து செயல்படுவதால் எதிர்காலத்தில் அதிமுகவின் இயக்கத்தில் வாய்ப்பு இருக்கும்.

அதிமுக மட்டும்தான்
28 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான். இந்த அரசு மக்களுக்கான அரசு, அவர்கள் நினைத்ததால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இவ்வாறு பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

உற்சாகப்படுத்தவே..
அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூட்டத்தில் அதிக மகளிர் பங்கேற்றதால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வாறு பேசினேன். வேறு எந்த காரணமும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications