மத்தியஅரசை பகைச்சுக்க கூடாது! உதயநிதிக்கு துதி பாடுவது தப்புங்க! செல்லூர் ராஜு தரும் முக்கிய அட்வைஸ்
மதுரை : மத்திய அரசை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நடந்துகொள்வது சரியில்லை எனவும், திமுக ஆட்சி விளம்பர ஆட்சி, விடியல் தராத ஆட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மீண்டும் தேர்ந்தெடுத்த பிறகு மதுரை கே கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், தேர்ந்தெடுப்பது கழகத்தின் தலைமை தான், மற்றவர்கள் போட்டியிடுவது குறித்த நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அதிமுக தலைமை
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் இது திமுக அல்ல. சட்டமன்றத்தில் உதயநிதியை துதி பாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான். மக்கள் திமுக மீது கோபத்தில் இருக்கிறார்கள் இது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை, விலைவாசி விஷம் போல் ஏறி உள்ளது. எதிர்க்கட்சி விவாதங்களை முடக்க பார்க்கிறார்கள், திமுக ஆட்சி விளம்பர ஆட்சி விடியல் தராத ஆட்சி,

தொழிலாளர்களுக்கு உதவி
கைத்தறி மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நிரம்பிய மேதினக் கூட்டம் நடைபெறும் அதிமுக துவங்கிய காலத்திலிருந்து நடைபெறுகிறது. நலிந்த தொழிலாளர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்படும் இது எந்த இயக்கத்திலும் இல்லை. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் சரியாக நடைபெறவில்லை என்று நகர்ப்புற துறை அமைச்சரிடம் கூறினேன் அவர் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்,

பெட்ரோல் டீசல் வரி
பெட்ரோல் டீசல் வரியை தமிழகம் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் விமர்சனத்தை முதலமைச்சர் மறுக்கிறார். தமிழ்நாடு அண்டை மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து உள்ளதால் அருகே இருக்கக்கூடிய மாவட்டங்கள் லாரிகளில் பெட்ரோல் டீசல் அங்கு போய் வாங்கி வரும் சூழ்நிலையில் உள்ளது அதே போல் தமிழகம் ஏன் செய்யக் கூடாது,

மத்திய அரசை பகைக்க கூடாது
அதைவிட்டுவிட்டு பிரதமரை மறைமுகமாக தாக்குவது. மத்திய அரசை எதிர்த்து நடந்துகொள்வது முதல்வருக்கு சரியில்லை. பிரதமர் காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டார். அண்டை மாநிலம் பெட்ரோல் டீசல் விலை குறைத்து தரும் போது ஏன் தமிழகம் தர கூடாது என்றுதான் மக்கள் கேள்வி.. எழுப்புகின்றனர்.." என பேசினார்.












Click it and Unblock the Notifications