மதுரையைக் கலக்கும் கொரோனா பால்..! ரசித்து ருசிக்கும் வாடிக்கையாளர்கள்!
மதுரை: ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் நிலையில், மதுரை அருகே கொரோனாவின் பெயரில் கொரோனா பால் என்ற பெயரில் மூலிகை பாலை விற்பனை செய்து அசத்தி வருகிறார் இளைஞர் ஒருவர்
Recommended Video
சீனாவிலிருந்து பரவிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பிக்கச் செய்துள்ளநிலையில், அதற்கான தடுப்பூசிகளின் மூலமாக மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா என பல்வேறு வைரஸ்கள் பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தற்போது ஓமிக்ரான் என்ற பெயரில் கொரோனாவின் உருமாறிய வைரஸ், மீண்டும் உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஓமிக்ரான் பரவல்
தற்போது இந்தியாவுக்குள் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, இந்தியா முழுவதும் அதி தீவிர கண்காணிப்பை ஒன்றிய மற்றும் மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. பிற உருமாறிய கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் ஒமிக்ரானின் பரவுதல் மிகத் தீவிரமானது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கருப்பட்டி காபி
இந்நிலையில் மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே சாயா கருப்பட்டி காபி என்ற கடையில் கொரோனா பால் தற்போது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் சாலமோன் ராஜ் கூறுகையில், கருப்பட்டியை மூலப்பொருளாக வைத்து, காபி, தேநீர், பால் என விற்பனை செய்து வருகிறோம். இது நமது பாரம்பரியமான முறையாகும். சீனி பயன்படுத்தும் நடைமுறை மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றாகும்.

பெருகும் ஆதரவு
ஆனால், அது நமது உடலுக்கு கேடு விளைவிப்பது. ஆனால், பனங்கருப்பட்டி, நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கக்கூடியது. அதனால் இங்கு காபி, பால் மற்றும் தேநீர் ஆகியவற்றுக்கு கருப்பட்டியையும், நாட்டுச் சக்கரையையும் பயன்படுத்துகிறோம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.

கொரோனா பால்
கொரோனா காலம் என்பதால், கொரோனா பால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். பாலில், மிளகு, மஞ்சள்தூள், சுக்கு ஆகியவற்றுடன் கருப்பட்டியையும் கலந்து விற்பனை செய்கிறோம். இதனை மக்கள் வெகுவாக விரும்பி அருந்துகின்றனர். இது தவிர காலையும் மாலையும் பல்வேறு வகையான பயறு வகைகளையும் விற்பனை செய்கிறோம்.

வாடிக்கையாளர்கள் ஆதரவு
கடலை எண்ணெயில் பொறிக்கப்பட்ட உளுந்தவடையும் விற்பனைக்கு உள்ளது. மக்களுக்கு நியாயமான விலையில், ஆரோக்கியமான பொருளை விற்பனைக்குத் தருகிறோம் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி' என்கிறார். மிகச் சிறிய கடைதான் என்றாலும், அச்சம்பத்து பகுதியைக் கடந்து செல்கின்ற நபர்கள் பெரும்பாலும் இதன் கருப்பட்டி காபியை மட்டுமன்றி கொரோனா பாலையும் ஒருமுறை ருசித்துவிட்டே செல்கின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications