போலீஸ் தேர்வில் முதல் முறை உயரம் சரி, 2வது முறை உயரம் குறைவு.. ஐகோர்டில் இளம் பெண் வழக்கு
மதுரை: ஏற்கனவே நடந்த போலீஸ் தேர்வில் மனுதாரர்களின் உயரம் சரியாக இருந்த நிலையில், தற்போது நடந்த தேர்வில் மனுதாரர்களின் உயரம் குறைவாக இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. மனிதர்களின் உயரம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது. எனவே மனுதாரர்களுக்கு மீண்டும் உயர அளவீடு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இளம் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவகங்கையை சேர்ந்த ரமிலா என்ற இளம்பெண், தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "கடந்த 21.8.2025 அன்று அறிவிப்பு தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 2,833 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த எழுத்துத்தேர்வில் நான் வெற்றி பெற்றேன். அதன்பின் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன்.

அதில் உயர அளவீட்டு தேர்வுக்கு சென்றேன். அப்போது முதல் அளவீட்டில் என் உயரம் 157.4 செ.மீ. இருந்ததாக கூறப்பட்டது. மேல்முறையீடு செய்து மறு அளவீடு செய்தபோது 157.9 செ.மீ. உயரம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், போதிய உயரம் இல்லை என்று தெரிவித்து, என்னை தகுதிநீக்கம் செய்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய துணைக்குழு தலைவர் நோட்டீஸ் தந்தார்.
முன்னதாக 2023-ம் ஆண்டில் நடந்த போலீஸ் பணித்தேர்வில் என் உயரத்தை 159 செ.மீ. என அதிகாரிகள் பதிவு செய்து தகுதி செய்தனர். ஆனால், மொத்த மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி பணி மறுத்தனர். ஆனால் கடந்த ஆண்டு நடந்த காவலர் ஆள்தேர்வில் என் உயரம் குறைவாக தகுதிநீக்கம் செய்ததாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். என் உயரத்தை மீண்டும் அளவீடு செய்து அதன் அடிப்படையில் அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும், அது வரை ஒரு பணியிடத்தை காலியாக வைக்கவும் சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் ரமிலா கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே நடந்த போலீஸ் தேர்வில் மனுதாரர்களின் உயரம் சரியாக இருந்த நிலையில், தற்போது நடந்த தேர்வில் மனுதாரர்களின் உயரம் குறைவாக இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. மனிதர்களின் உயரம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது. எனவே மனுதாரர்களுக்கு மீண்டும் உயர அளவீடு நடத்த உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
நேற்றைய விசாரணை முடிவில், இந்த மனுக்களை போலீஸ் பணிக்கான உயரம் அளவீடு கோரி தாக்கலாகி நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்ந்து விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications