தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை! வட மாநில வணிகர்கள் முறைகேடு -அமைச்சர் மூர்த்தி
மதுரை: தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தொழில் செய்யும் வட மாநிலங்களை சேர்ந்த வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக வேதனைத் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

வணிகர் சங்க பேரமைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என்ற தகவலை வெளியிட்டார். வணிகர்கள் இப்படி வரி செலுத்தாமல் இருந்தால் தமிழகம் எப்படி வளர்ச்சி அடையும் என வேதனை தெரிவித்த அவர் வட மாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

துணை நிற்போம்
தமிழக வணிகர்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்றும் வட மாநிலங்களை சேர்ந்த வணிகர்களை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த இங்குள்ள வணிகர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி, வணிகர்கள் சரியாக வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சி அடையும் எனக் கூறினார். வணிகர் நல வாரியத்தில் புதிதாக ஐம்பதாயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறிய அவர் அந்த வாரியத்தின் மூலம் நலிந்த வணிகர்களுக்கு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அரிசிக்கு ஜி.எஸ்.டி.
இதனிடையே அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதை கண்டித்து வரும் 22-ஆம் தேதி சென்னையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என மத்திய அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மூர்த்தி
வணிகர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வணிகர்கள் 3 லட்சம் பேர் வரி செலுத்தவில்லை என அவர்களை பற்றியே அந்த விழா மேடையில் அமைச்சர் மூர்த்தி பேசியிருப்பது அவரது துணிச்சலை காட்டுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications