ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு ஆதரவான ஃபேஸ்புக் பதிவு- மதுரை இளைஞர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- 16 ஆவணங்கள் பறிமுதல்
மதுரை: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகாரில் கைது செய்யபப்ட்ட மதுரை இளைஞர் செந்தில்குமார் என்ற முகமது இக்பால் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 7 மணிநேரம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பென் டிரைவ், சிம் கார்டு உள்ளிட்ட 16 ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இக்பாலுடன் தொடர்பில் இருந்த திருப்பூர் இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
Recommended Video
மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற முகமது இக்பால் கடந்த ஆண்டு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்.. என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கபட்டது.

இக்பால் மீது வழக்கு
இந்த பதிவை வெளியிட்ட இக்பாலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-க்கு மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ.வால் இக்பால் கைது
இதையடுத்து இக்பாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மதுரையில் காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மகபூப்பாளையம் ஆகிய பகுதிகளில் கேரளாவில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.

மதுரையில் அதிரடி சோதனை
இக்பால் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் நடந்த இந்த சோதனை பிற்கபல் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது பென் டிரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்ட 16 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

திருப்பூர் இளைஞரிடம் விசாரணை
மேலும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் திருப்பூரை சேர்ந்த இளைஞருடன் அதிக நேரம் இக்பால் உரையாடி இருந்தார். இதனையடுத்து திருப்பூரை சேர்ந்த அந்த இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் திருப்பூர் இளைஞர் விடுவிக்கப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications