ரூ.100 கோடி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரை பயன்படுத்தி மோசடி! முன்னாள் உதவியாளரை தூக்கிய போலீஸ்
மதுரை: ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளார் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்மேனி பகுதியில் ஒரு வீட்டு மனையை ரூ.3.5 கோடிக்கு பேசி இரு மனைகளை வாங்கி பணம் கொடுக்காமல், கட்டுமான நிறுவனத்தை மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலமாக ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
மதுரையில் ரியஸ் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அதிகரித்திருப்பதால், மதுரையில் இடம் வாங்க தொழிலதிபர்கள் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். அதேபோல் பொன்மேனி, சூர்யா நகர், வண்டியூர், கருப்பாயூரணி, அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

யார் அந்த உதவியாளர்?
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகியோரை ரூ.100 கோடி மோசடி புகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். சட்டசபை உறுப்பினராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதில் இருந்தே அவரின் உதவியாளராக இருந்தவர் ஜெய் பாலாஜி.
பிடிஆர்-க்கு வந்த புகார்
இவர் மருதம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சுமார் ஓராண்டுக்கு முன்னதாக ஜெய் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் வரத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஜெய் பாலாஜியை நேரில் எச்சரித்து, பணியில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கி இருக்கிறார். இந்த நிலையில் ஜெய் பாலாஜி மற்றும் கலாவதி இருவரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
அமைச்சர் பெயரில் மோசடி
ஜெய் பாலாஜி மற்றும் கலாவதி இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். கலாவதி பட்டயக் கணக்காளராக இருக்கிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக பாலாஜி வந்த பின், அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அவரின் பெயரைக் கூறி மாநகராட்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை அமைச்சருக்கு தெரியாமல் செய்திருக்கிறார்.
மாநகராட்சியில் தலையீடு
இதன் மூலமாக பெரிய தொகையையும் சம்பாதித்துள்ளார். மாநகராட்சி ஒப்பந்தம், பிளான் அனுமதி உள்ளிட்டவை மூலமாக அதிகமாக சம்பாதித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் பல்வேறு பணிகளை செய்து தருவதாக கூறி ரூ.3.50 கோடி மதிப்பிலான இரு வீட்டு மனைகளை பெற்றுள்ளார். அதற்காக பத்திரப் பதிவுக்கு மட்டும் ரூ.77 லட்சம் செலவாகியுள்ளது.
கட்டுமான உரிமையாளருக்கு மிரட்டல்
ஆனால் சொன்னபடி எந்த பணிகளையும் செய்து கொடுக்காததால், கட்டுமான உரிமையாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் ஜெய் பாலாஜி அவரை மிரட்டியதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் மருதம் ரியல் எஸ்டேட்டில் தவணை முறையில் பணம் செலுத்தினால் மனை வழங்குவதாக ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி இருவரும் சாமானிய மக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றி இருக்கின்றனர்.
குடும்பத்துடன் உதவியாளர் கைது
இந்த பணத்தை குடும்பத்தினர் பெயரிலும், பினாமி பெயரிலும் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில் போலீசார் ரூ.100 கோடி மோசடி செய்ததாக இருவரையும் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருக்கின்றனர். ஏற்கனவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். தற்போது முன்னாள் உதவியாளரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications