தமிழகத்தை உறைய வைத்த தந்தை - மகன் கொலை..ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு! பரபரப்பு
மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் வெளியாக உள்ளதால், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரியான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் போலீசார் தாக்கியதில் கடுமையாக காயமடைந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடை திறக்கும் நேரம் தொடர்பான விவகாரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் அங்கு தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை ஆரம்பத்தில் மாநில போலீசார் விசாரித்தாலும், பின்னர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில், அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வழக்கின் அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துக்குமார் இந்த வழக்கை இன்று (திங்கட்கிழமை) தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இதனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்குக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம், காவல் துறையின் செயல்பாடு மற்றும் மனித உரிமைகள் குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. சமூக வலைதளங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த வழக்கில் விரைவான நீதி கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்ற முக்கிய வழக்காக மாறியது.
தற்போது, இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும், அல்லது நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் வெளியாக உள்ளதால், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications