கஜா நிவாரண நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது.. மதுரை ஹைகோர்ட்டில் தமிழக அரசு குற்றச்சாட்டு
மதுரை: மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தென்னை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு, மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், முருகேசன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளையும் ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு தனது இறுதி அறிக்கையை சமர்பிப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்தநிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜாவிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
மாநில அரசு போதிய விளக்கங்களை தர தவறியதால் நிவாரணம் வழங்க கால தாமதம் ஆகிறது என்று இதில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் மத்திய குழுவின் இறுதி அறிக்கை அடிப்படையிலேயே தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதி அளிக்க முடியும், மத்தியக்குழு அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications