மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா- தமிழர்கள் வாழும் தாராவியிலும் 9 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5649 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
நாட்டில் கேரளாவில்தான் கொரோனாவின் தாக்கம் தொடக்கத்தில் அதிகமாக இருந்தது. பின்னர் மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்பு இருந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5649 ஆக அதிகரித்திருக்கிறது. அத்துடன் இன்று கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 ஆகும்
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 189 ஆகியுள்ளது. மகாராஷ்டிராவில் 789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. இம்மாநிலத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 2,272 ஆக அதிகரித்தது. டெல்லியில் 2156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 1,587 ; ராஜஸ்தானில் 1868; தமிழகத்தில் 1629; உத்தரப்பிரதேசத்தில் 1337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும்.....
covid19india.org புள்ளி விவரப்படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 990 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 654 ஆகவும் அதிகரித்துள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications