ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு.. கொல்லப்பட்ட நபர்.. நண்பர்களே முதுகில் குத்திய சோகம்
மும்பை: ரூ.4 கோடி இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டதால் தனது சக நண்பர்களால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வசித்து வந்தவர்தான் 46 வயதான அசோக் பலேராவ். இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.

இவர் இறந்ததையடுத்து அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், உயிரிழந்த அசோக் பலேராவின் சகோதரர் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்து சில தகவல்களை கூறினார். இதனையடுத்து அசோக் பலேராவின் நண்பர்கள் ஆறு பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "எங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அசோக் பலேராவின் உடலை சாலையோரத்தில் கைப்பற்றினோம். இவர் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர். எனவே நடைப்பயிற்சியின்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என வழக்குப்பதிவு செய்தோம்.
இந்நிலையில் ஓராண்டு கழித்து அசோக் பலேராவின் சகோதரர் எங்களிடத்தில் வந்து தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சந்தேக நபர்களின் பட்டியலை கொடுத்தார். இதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில் எங்களுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. அதாவது, அசோக் பலேராவ் ரூ.4 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இந்த தொகையை எப்படியாக பெற வேண்டும் என்பதுதான் அசோக் பலேராவ் மற்றும் அவருடைய நண்பர்களின் நோக்கம். எனவே தன்னுடைய இன்சூரன்ஸை முறைகேடாக பெறுவதற்கு தன்னை போன்ற ஒருவரை கொலை செய்ய அசோக் பலேராவ் தனது நண்பர்களுடன் திட்டம் தீட்டினார்.
ஆனால் இவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அசோக் பலேராவ் போல ஒருவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து திட்டத்தை கைவிடுவதாக அசோக் பலேராவ் கூறியுள்ளார். ஆனால் அசோக் பலேராவுக்கு தெரியாமல் அவரது நண்பர் 6 பேரும் மற்றொரு திட்டத்தை ரகசியமாக தீட்டியுள்ளனர். அதன்படி, இவர்களே அசோக் பலேராவை கொலை செய்துள்ளனர். பின்னர் தாங்கள்தான் அவரது உறவினர் எனக்கூறி காவல் நிலையத்தை அணுகி அதற்கான சான்றிதழை பெற்றுள்ளனர்.
இதனை வைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி ரூ.4 கோடியை பெற்று அதனை பங்கிட்டுள்ளனர். அசோக் பலேராவின் சகோதரர் கொடுத்த பட்டியலில் உள்ள நபர்களின் வங்கி கணக்கை பரிசோதித்ததில் எங்களுக்கு இந்த உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்துள்ளோம்" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தன்னுடைய இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு தன்னை ஒருவர் பலி கொடுத்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications