Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புயல் அலர்ட் 1 வாரம் முன்பே வந்தது.. கப்பல் கேப்டன் மெத்தனமே விபத்துக்கு காரணம்.. என்ஜினீயர் புகார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: புயல் எச்சரிக்கை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிப்பு வந்த போதிலும், கப்பலின் கேப்டன் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக் கூறியுள்ளார்.

அரபிக்கடலில் உருவான ''டவ் தே' புயல் குஜராத் மாநில கடற்கரையில் கடந்த செய்வாய்க்கிழமை அதிகாலை கரையை கடந்தது.

முன்னதாக இந்த புயல் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகள் வழியாக சென்றபோது மும்பையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

கடலில் மூழ்கிய கப்பல்

கடலில் மூழ்கிய கப்பல்

அப்போது கடலில் எழுந்த பேரலைகள் காரணமாக நங்கூரம் உடைந்ததால் மும்பையின் தென் மேற்கு பகுதியில் 70 கி.மீ. தொலைவில் 261 ஊழியர்களுடன் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பி-305 என்ற கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்தவர்கள் லைப் ஜாக்கெட் மூலம் கடலில் குதித்து தத்தளித்தனர். ஐ.என்.எஸ் கொச்சி போர்க்கப்பல், கடற்படைக்கு சொந்தமான மேலும் சில கப்பல்கள் ,விமானப்படை ஹெலிகாப்டர்கள் இதுவரை 188 பேரை உயிருடன் மீட்டுள்ளது.

37 உடல்கள் மீட்பு

37 உடல்கள் மீட்பு

இதுவரை 37 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 38 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 188 பேர்களில் கப்பலின் தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக்கும் ஒருவர். மாயமான கப்பலின் கேப்டன் பால்விந்தர் சிங், தொழில்நுட்ப கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரதாப் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் புயல் எச்சரிக்கை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிப்பு வந்த போதிலும், கப்பலின் கேப்டன் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக் கூறியுள்ளார்.

கேப்டன் மெத்தனம்

கேப்டன் மெத்தனம்

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- சூறாவளி தாக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. பல கப்பல்கள் அருகில் இருந்தன. நான் கேப்டன் பால்விந்தர் சிங்கிடம், நாம் துறைமுகத்திற்கு செல்வோம் என்று கூறினேன். ஆனால் அவர் காற்று 40 கி.மீ வேகத்தில்தான் வீசும். சூறாவளி ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் மும்பையை கடந்து விடும் பிரச்சினையில்லை என்று கூறினார். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக காற்று 100 கி.மீ வேகத்தில் வேகத்தில் வீசியது.

லைப் ராப்ட்ஸ் பயன்படுத்த முடியவில்லை

லைப் ராப்ட்ஸ் பயன்படுத்த முடியவில்லை

பேரலையாலும், கடும் காற்றினாலும் கப்பலின் 5 நங்கூரங்களும் உடைந்தன. கப்பல் தடுமாறியது. பெரிய துளை வழியாக தண்ணீர் வரத் தொடங்கியது. கப்பலில் இருந்த 16 லைப் ராப்ட்ஸை பயன்படுத்த முயற்சித்தோம். ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே பயன்படுத்தும் நிலையில் ஏற்கனவே இருந்தது. மற்றவை ஓட்டையாக இருந்தது. இருந்த போதிலும் கடும் அலைகளால், காற்றால் லைப் ராப்ட்ஸ் பக்கம் பார்க்க கூட எங்களால் முடியவில்லை.

அல்லாஹ்வின் அருளால் பிழைத்தேன்

அல்லாஹ்வின் அருளால் பிழைத்தேன்

இதனை தொடர்ந்துதான் லைப் ஜாக்கெட் மூலம் கடலில் குதித்தோம். நீரில் அதிக நேரம் இருந்ததாலும், பீதி மற்றும் அதிர்ச்சி காரணமாகவும் பலர் இறந்து விட்டனர். எனக்கும் மரணம் வருவதை அருகில் கண்டேன், ஆனால் அல்லாஹ்வின் அருளால் காப்பாற்றப்பட்டேன்" என்று தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக் தெரிவித்தார். ரஹ்மான் ஷேக் தற்போது முழங்கால் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+