அவ்வளவுதான்.. கதை ஓவர்.. அதே விஷயத்தை காரணம் காட்டி மூத்த வீரரை ஓரம் கட்டிய கோலி.. ட்விஸ்ட்
மும்பை: நியூசிலாந்து எதிரான இந்திய அணியின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகே டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி மீண்டும் களமிறங்க உள்ளார்.

கேப்டன்
கோலி கேப்டனாக வர உள்ள நிலையில் அணியில் இருந்து ஒரு வீரரை நீக்க வேண்டும். இந்த நிலையில்தான் இன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா, ரஹானே ஆட மாட்டார்கள் என்று உறுதியாகி உள்ளது. ஜடேஜா, இஷாந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் இவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ரஹானேவும் காயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீக்கம்
பொதுவாக இந்திய அணியில் ஒரு வீரரை நீக்க வேண்டும் என்றால் அவரை நீக்குவதற்கான உண்மையான காரணத்தை கோலி சொல்ல மாட்டார். பெரும்பாலும் காயம் ஏற்பட்டது என்பார். இல்லையென்றால் அதிகபட்சம் அணியின் தேவை கருதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பார்கள். வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக ஒருவர் நீக்கப்பட்டாலும் கூட அவர் ஏன் நீக்கப்பட்டார் என்ற செய்தியை கோலி சொல்லவே மாட்டார்.

மோசமான ஆட்டம்
இந்த நிலையில்தான் தற்போது மோசமான ஆட்டம் காரணமாக ரஹானே நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் டெஸ்டில் சரியாக ஆடுவது இல்லை. மோசமான பார்மில் இருக்கிறார். கோலி வருகையை அடுத்து நன்றாக ஆடும் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்க முடியாது. அதேபோல் ஒரே போட்டியில் சொதப்பியதை காரணம் காட்டி மயங்க் அகர்வாலை நீக்கவும் முடியாது.

ரஹானேகோலி
இதன் காரணமாக மோசமாக ஆடிய ரஹானேவை கோலி துணிச்சலாக நீக்கி இருக்கிறார். ஆனால் கோலி அந்த காரணத்தை சொல்லாமல் ரஹானேவிற்கு காயம் என்று குறிப்பிட்டுள்ளார். காயம் என்று கூறி ரஹானேவை உட்கார வைத்துள்ளார். ரஹானே மோசமான பார்மில் இருக்கிறார். வயதும் ஆகிவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
Recommended Video

நீக்கம்
இதனால் இனி ரஹானே டெஸ்ட் போட்டியில் தொடர் வாய்ப்புகளை பெறுவாரா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள். இனி பெரும்பாலும் தேர்வுக்குழு அவரை தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு. இன்று ஆடும் இந்திய அணியில், மயங்க் அகர்வால், கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications