அவ்வளவுதான்.. கதை ஓவர்.. அதே விஷயத்தை காரணம் காட்டி மூத்த வீரரை ஓரம் கட்டிய கோலி.. ட்விஸ்ட்
மும்பை: நியூசிலாந்து எதிரான இந்திய அணியின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகே டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி மீண்டும் களமிறங்க உள்ளார்.

கேப்டன்
கோலி கேப்டனாக வர உள்ள நிலையில் அணியில் இருந்து ஒரு வீரரை நீக்க வேண்டும். இந்த நிலையில்தான் இன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா, ரஹானே ஆட மாட்டார்கள் என்று உறுதியாகி உள்ளது. ஜடேஜா, இஷாந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் இவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ரஹானேவும் காயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீக்கம்
பொதுவாக இந்திய அணியில் ஒரு வீரரை நீக்க வேண்டும் என்றால் அவரை நீக்குவதற்கான உண்மையான காரணத்தை கோலி சொல்ல மாட்டார். பெரும்பாலும் காயம் ஏற்பட்டது என்பார். இல்லையென்றால் அதிகபட்சம் அணியின் தேவை கருதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பார்கள். வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக ஒருவர் நீக்கப்பட்டாலும் கூட அவர் ஏன் நீக்கப்பட்டார் என்ற செய்தியை கோலி சொல்லவே மாட்டார்.

மோசமான ஆட்டம்
இந்த நிலையில்தான் தற்போது மோசமான ஆட்டம் காரணமாக ரஹானே நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் டெஸ்டில் சரியாக ஆடுவது இல்லை. மோசமான பார்மில் இருக்கிறார். கோலி வருகையை அடுத்து நன்றாக ஆடும் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்க முடியாது. அதேபோல் ஒரே போட்டியில் சொதப்பியதை காரணம் காட்டி மயங்க் அகர்வாலை நீக்கவும் முடியாது.

ரஹானேகோலி
இதன் காரணமாக மோசமாக ஆடிய ரஹானேவை கோலி துணிச்சலாக நீக்கி இருக்கிறார். ஆனால் கோலி அந்த காரணத்தை சொல்லாமல் ரஹானேவிற்கு காயம் என்று குறிப்பிட்டுள்ளார். காயம் என்று கூறி ரஹானேவை உட்கார வைத்துள்ளார். ரஹானே மோசமான பார்மில் இருக்கிறார். வயதும் ஆகிவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
Recommended Video

நீக்கம்
இதனால் இனி ரஹானே டெஸ்ட் போட்டியில் தொடர் வாய்ப்புகளை பெறுவாரா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள். இனி பெரும்பாலும் தேர்வுக்குழு அவரை தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு. இன்று ஆடும் இந்திய அணியில், மயங்க் அகர்வால், கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications