இத்தனை நாளும் இது தெரியாம போச்சே.. கொரோனா தடுப்பூசியால் இவ்வளவு நன்மைகளா.. புது ஆய்வின் முடிவு
கொரோனா தடுப்பூசி பல வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது
நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பங்கள் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதுகுறித்த புது ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
தொற்றை ஒழிக்க வேறு வழி இல்லாததால், உலகம் முழுவதும் தடுப்பூசிகளை பெரிதும் நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.. இந்தியாவிலும் அதே நிலைமைதான்.
இன்றைய நிலைவரப்படி, நாடு முழுவதும் 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது..

தடுப்பூசிகள்
அந்த வகையில், 100 சதவீதம் இலக்கை விரைவில் இந்தியா எட்டிப்பிடிக்க உள்ளது.. இதுவரை 98.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் அறிக்கை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.... கடந்த ஜனவரியில் தடுப்பூசி விநியோகம் தொடங்கிய ஜனவரியில் தடுப்பூசி விநியோகம் தொடங்கிய காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன.

மத்திய சுகாதரத்துறை
ஆனால், தடுப்பூசியால் ஏற்படும் பாதகமான பக்க விளைவுகளைக் கண்டு அதிகம் பேர் தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.. இதற்கான பல்வேறு விளக்கங்களை மத்திய சுகாதார துறை அளித்திருந்தது... தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியது.. இதனிடையே வந்த 2வது அலை பரவல், ஏராளமான உயிர்களை காவு வாங்கிவிட்டதால், பொதுமக்களே தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். இதுவரை அப்படி ஒரு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
Recommended Video

ஆய்வுகள்
மற்றொருபக்கம் புது புது தடுப்பூசிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டுதானிருக்கிறார்கள்.. அதுகுறித்த ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்ற ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.. கொரோனாவுக்கு ரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மெடிக்கல் காலேஜ் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.. அந்த முடிவுகளை "ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷன்" என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

தடுப்பு
அதில், கோவிட்-19 தடுப்பூசிகள், அதுபோலவே உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது.. கொரோனா வைரஸ்கள் என்றால், அது சார்பெகோ வைரஸ் அடங்கிய சார்ஸ் கோவ்-1, சார்ஸ், சார்ஸ் கோவ்-2 ஆகிய 3 வைரஸ்களை குறிக்கிறது.. கோவிட்-19 தடுப்பூசி இப்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரஸூடன், பிற வைரஸ்களையும் தடுக்கிறது.

ஜலதோஷம்
சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற எச்கோவ்-ஆக்43, எச்கேயு-1 வைரஸ்களில் இருந்தும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.. இதனிடையே, இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்ற ஆய்வும் தற்போது வருவதாக விஞ்ஞானி பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications