புதிய வினையூக்கிகளை கண்டுபிடித்து சாதனை.. வேதியியலுக்கான நோபல் பரிசு.. இருவருக்கு பகிர்ந்தளிப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன், ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் ஆகிய வேதியியல் அறிவியலாளர்களுக்கு வேதியலுக்கான 2021ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசு தினமும் ஒவ்வொரு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், அமைதி, இலக்கியம் , மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில் இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன், ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு?
Photo Credit : Wikimedia
புதிய வகை வினையூக்கிகளை இவர்களை கண்டுபிடித்தனர். asymmetric organocatalysis என்ற புதிய வகை வினையூக்கிகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது தனித்துவமான வினையூக்கிகள். வினையூக்கிகள் என்பது வேதிப்பொருட்களுக்கு இடையிலான வினையை வேகப்படுத்தும் சாதனம் ஆகும்.

வினையூக்கி
இதுவரை உலகில் உலோகங்கள் மற்றும் நொதிகள் என்ற இரண்டு வகையான வினை யூக்கிகளே இருந்ததாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிதாக தனித்துவமான வினையூக்கிகளை உருவாக்கினார்கள். இதன் காரணமாக புதிதாக மூலக்கூறுகளை உருவாக்க முடியும், புதிய முறையில் மூலக்கூறுகளை உருவாக்க முடியும். வேதியியல் துறையில் இதுவரை இல்லாத மாபெரும் மாற்றத்தை இந்த ஒற்றை கண்டுபிடிப்பு நிகழ்த்தி உள்ளது.

முக்கியம் ஏன்?
அதாவது இதுவரை அறிவியல் உலகம் வினையூக்கிகள் குறித்து அறிந்து வைத்து இருந்த அனைத்தையும் இந்த ஒற்றை கண்டுபிடிப்பு புரட்டி போட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன், ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வினையூக்கிகளை மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்த முடியும். இதனால் எளிமையாக தனித்துவமான மூலக்கூறுகளை உருவாக்க முடியும்.

தனித்துவமான மூலக்கூறு
இது மருத்துவ துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மருந்துகளை எளிமையாக உருவாக்கவும், கடினமான மூலக்கூறு கட்டமைப்பை எளிதாக உருவாக்கவும் இந்த வினையூக்கிகள் உதவும் என்பதால் இந்த நோபல் பரிசு இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1.1 மில்லியன் டாலர் இவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications