சுழற்றி சுழற்றி அடிக்கும் காற்று.. நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே காட்டுத் தீ பரவும் அபாயம்
கர்நாடக-தமிழக எல்லையில் காட்டு தீ பரவியதால் மரங்கள் எரிந்து கருகின
ஊட்டி: நாளெல்லாம் சுழட்டி.. சுழட்டி.. அடிக்கும் காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவாரமாக நீலகிரியில் பலத்த காற்று வீசி வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இந்த காற்று வீசுகிறது. இதனை வறட்சி காற்று என்கிறார்கள். ஏற்கனவே 3 மாதங்களாக உறைபனியில் காய்ந்து போன செடி, கொடிகள் இந்த வறட்சி காற்றின் காரணமாக மேலும் கருகி கிடக்கின்றன.

அது மட்டுமல்ல, இது போன்ற நேரத்தில் காய்ந்து கிடக்கும் புல்வெளி பகுதிகளில் ஒரு சிறு தீப்பொறி பட்டாலும் அது பெரிய விபத்தையே ஏற்படுத்தி விடும். நேற்றுகூட முதுமலை ஒட்டிய பந்திப்பூர் வனத்தில் பயங்கர காட்டுத்தீ பரவியது. இந்த வனப்பகுதியில்தான் புலி, யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
திடீரென ஏற்பட்ட தீயை பார்த்ததும் சாலைகளில் போய்க் கொண்டிருந்த மக்கள் எல்லோருமே அலறியடித்து ஓடினார்கள். வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பந்திப்பூர்-கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
நேற்று முழுவதும் இந்த தீயை அணைக்க பெருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெயில் கொடுமை வந்துவிட்டதால், அதிலிருந்து தப்பித்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த காற்றை ரசித்து அனுபவித்து செல்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications