மூர்க்கத்தனமாக ‘மூர்த்தி’.. மிரளவிட்ட ‘முதுமலை’! இனிமே ரெஸ்ட் தான்! கண்ணீர் மல்க கிடைத்த கவுரவம்!
நீலகிரி : முதுமலையில் சிறந்த கும்கிகளாக பணியாற்றி வந்த 2 வளர்ப்பு யானைகளான மூர்த்தி மற்றும் முதுமலை ஆகிய 2 கும்கி யானைகள் ஓய்வு பெற்றது, ஓய்வு பெற்ற யானைகள் அலங்கரிக்கப்பட்டு மற்ற யானைகளுடன் சிறப்பான உணவுகள் வழங்கி ஓய்வு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில் காட்டு யானைகளை பிடித்து பழக்கபடுத்தி வன விலங்குகளை வேட்டையாட யானைகள் பயன்படுத்தபட்டு வந்தது.
பின்னர் கும்கி யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டவும், மனித மோதல்களில் ஈடுபடும் யானைகளை பிடிக்கவும் கும்கி யானைகள் பயன்படுத்தி வரபட்டது. இந்நிலையில் முதுமலை தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது.

கும்கி யானைகள்
இந்த யானைகளுக்கு கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வன பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும், பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் ஈடுபடுத்தபட்டு வருகிறது. இந்த கும்கி யானைகள் அரசு ஊழியர்களாக செயல்பட்டு வருகிறது. இந்த யானைகளுக்கு 58 வயதானதுடன் பணி ஓய்வும் அளிக்கப்படுகிறது.

முதுமலை
இந்நிலையில் 1967ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த முதுமலை என்ற யானையும், 1998-ம் ஆண்டு கேரளாவில் 10 பேரை கொன்று, தமிழகத்தில் 12 பேர் என 22 பேரை கொன்ற மக்னா யானையை தமிழக வனத்துறையினர் பிடித்து அதனை கும்கியாக மாற்றி முதுமலையில் பணியாற்றி வந்த மூர்த்தி என்ற யானையும் 58 வயதை எட்டியதையடுத்து இன்று முதுமலை தெப்பகாடு முகாமில் பணி ஓய்வு வழங்கபட்டது.

ஓய்வு
இரண்டு யானைகளுக்கும் நெற்றி பட்டம் சூட்டி அலங்கரிக்கபட்டு சிறப்பு உணவுகள் வழங்கபட்டது. ஓய்வு பெறும் யானைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையை வாசிக்க யானைகள் அழைத்து வரவழைக்கப்பட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கபட்டது.

கெளரவம்
ஓய்வு பெறும் யானைகளுக்கு முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கி பாகன்களுக்கு சால்வைகளை அணிவித்து கௌரவித்து யானைகளுக்கு பழங்களை வழங்கினர். அப்போது சக யானைகள் துதிக்கையை தூக்கி பிளறி பிரியா விடை கொடுத்தன. இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. ஓய்வு பெறும் யானைகள் இனிமேல் பணிகளில் ஈடுபடுத்த போவதில்லை, அரசு ஊழியர்களை போல் ஓய்வு பெறும் 2 யானைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து சென்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications