பீகார் தேர்தல் முடிவுகளில் பெரும் திருப்பம்.. எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர் எதிராக மாறிய ரிசல்ட்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், எக்ஸிட் போல் என்ன சொன்னதோ அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
தேர்தலுக்குப் பிறகு மக்களிடம் கருத்து கேட்டு ஒளிபரப்பபடுவது எக்ஸிட் போல். பொதுவாக இது தேர்தல் முடிவுகளுடன் சரியாகப் பொருந்திப் போகும்.

பீகாரிலும், மூன்றாவது கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்ததும், மாலை 6 மணிக்கு மேல், பல்வேறு நிறுவனங்கள், டிவி சேனல்கள் உடன் இணைந்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
இதில் கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளை அவை ஓரளவுக்கு சரியாக கணித்து விட்டன என்று சொல்லலாம். ஆனால், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை கணிப்பதில் அவை தோல்வி அடைந்துள்ளன.
உதாரணத்துக்கு, ரிபப்ளிக் டிவி, ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி அதிகபட்சம் 117 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டது. அதேநேரம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 138 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்றே கணிக்கப்பட்டது.
ரிபப்ளிக் டிவியின் இந்த கருத்துக் கணிப்பால் பாஜகவினரே மனம் தளர்ந்து போயினர். இன்னொரு பக்கம் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளை கடந்த காலங்களில் சரியாக கணித்து கூறிய -இந்தியா டுடே மை ஆக்சிஸ் இந்தியா- தேர்தல் முடிவுகளில், பாஜக கூட்டணிக்கு அதிகபட்சம் 91 தொகுதிகள் கிடைக்கும் என்றும், மகாகத்பந்தன் கூட்டணிக்கு 161 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது.
இப்படி பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகளும் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு எளிதான வெற்றி இருக்கும் என்று கணித்தது. சி வோட்டர் எக்ஸிட் போல் மட்டும் இரு தரப்புக்கும் கடுமையான போட்டி இருக்கும், ஆனால் 120 தொகுதிகளை ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி வெல்லும். 116 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் என்று கணித்தது.
ஆனால், காலை 11 மணி நிலவரப்படி எக்ஸிட் போல் முடிவுகளுக்கும், தேர்தல் முடிவுகளும் சம்பந்தமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. பாஜக கூட்டணி 134 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி சுமார் 95 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுக்கு மாறாக இப்படி ஒரு சட்டசபை தேர்தல் முடிவுகள், சமீப காலங்களில் வெளியானது கிடையாது. அந்த வகையில் பீகார் மக்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications