'பீகாரில் கொரோனா 3வது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது..' முதல்வர் நிதீஷ் குமார் பரபர பேச்சு
பாட்னா: பீகாரில் கொரோனா 3ஆம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. கொரோனா வேக்சின் பணிகளும் வேகமாக நடைபெற வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது,

இந்தச் சூழ்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தது. அதன் பிறகு நாட்டின் பல மாநிலங்களிலும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 9,195 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 6,358 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய தினம் வைரஸ் பாதிப்பு 44% அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பீகாரில் கொரோனா 3ஆம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் பீகாரில் 47 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் நிதீஷ் குமார் இப்படிக் கூறியுள்ளார்.
Recommended Video
முன்னதாக, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதீஷ் குமார் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் இரவு ஊரடங்கு தேவையில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications