அப்பாக்கு என்னாச்சு? சட்டென லாலு பிரசாத் மகனுக்கு போனை போட்ட மோடி! தழுதழுத்த தேஜஸ்வி! இதான் நாகரீகம்
பாட்னா: லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகனும் பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு போன் செய்து பிரதமர் மோடி பேசினார். அப்பாவுக்கு என்னாச்சு? இப்போது உடல்நலம் எப்படி இருக்கு? என அவர் கேட்டதற்கு தழுதழுத்த குரலில் தேஜஸ்வி யாதவ் பதிலளித்தார்.
பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான இவர் மத்திய அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

படிக்கட்டில் தவறி விழுந்த லாலு
இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி ராப்ரி தேவியுடன் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டு மாடி படிக்கட்டில் இருந்து லாலு பிரசாத் யாதவ் திடீரென்று தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தோள்பட்டை, முதுகில் அடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து லாலு பிரசாத் யாதவை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது லாலு பிரசாத் யாதவ் நலமாக உள்ளார். இருப்பினும் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது லாலு பிரசாத் யாதவை ஒன்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கண்காணித்து வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

போனில் பேசிய பிரதமர் மோடி
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி யாதவுக்கு போன் செய்து பேசினார். அப்போது அப்பா லாலு பிரசாத் யாதவுக்கு என்னாச்சு? தற்போது உடல்நலம் எப்படி உள்ளது? என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார். இதற்கு தேஜஸ்வி யாதவ் தழுதழுத்த குரலில் பதிலளித்துள்ளார்.

கட்சி சார்பில் விளக்கம்
இதுபற்றி ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛பிரதமர் ந ரேந்திர மோடி, தேஜஸ்வி யாதவிடம் பேசி லாலு பிரசாத்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்'' என கூறப்பட்டு இருந்தது. பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் முதல்வராக இருக்கிறார். இங்கு பிரதான எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications