பீகாரில் ஷாக்! ஒரு தொகுதியில் ஆர்ஜேடி-க்கு ஈஸி வெற்றி.. மற்றொன்றில் தட்டு தடுமாறி வென்ற பாஜக
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று வெளியாக உள்ள இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் நிதிஷ் தரப்புக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவ.3ஆம் தேதி தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எதிர்பார்த்ததை போலவே பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.

பீகார்
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பையும் தராது என்ற போதிலும், மக்களிடையே இன்னும் தங்கள் செல்வாக்கு உள்ளதை நிரூபிக்க இந்த இடைத்தேர்தல் முக்கியம். பீகாரில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு மொகமா தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஆர்ஜேடியு-இன் அனந்த் சிங் சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதியில் அவரது மனைவி நீலம் தேவி போட்டியிட்டார்

இரு தொகுதிகள்
மற்றொரு தொகுதியான கோபால்கஞ் சுமார் 20 ஆண்டுகளாக பாஜகவிடம் உள்ள தொகுதியாகும். 20 ஆண்டுகளுக்குப் பின், அந்த தொகுதியை பாஜக இழக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் கூறியது. ஆர்ஜேடி சார்பில் இதில் மோகன் பிரசாத் குப்தா களமிறங்கினார். அவருக்கு எதிராக பாஜகவின் குசும் தேவி போட்டியிட்டார். குசும் தேவியின் அவரது கணவர் சுபாஸ் சிங்கின் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடக்கிறது.

முக்கியம்
வெறும் இரு தொகுதிகளின் முடிவுகள் தான் என்றாலும் கூட பீகாரில் ஆளும் தரப்பு தனது கவுரவத்தை நிரூபிக்கவே இந்த தேர்தலில் களமிறங்குகிறது. ஏனென்றால் பாஜக நிதிஷ்குமார் கூட்டணி முறிவுக்குப் பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். அங்கு ஆட்சியிலுள்ள நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் என பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாஜகவுக்கு ஷாக்
இந்தத் தேர்தல் முடிவுகள் தொகுதிகள் எண்ணிக்கை ரீதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் மக்களின் மனங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த 2024 மக்களவை தேர்தலுக்கும் கூட இது சிறு முன்னோட்டமாக அமையலாம். ஆளும் தரப்பும் சரி பாஜகவும் சரி தாங்கள் தான் இந்த இடைத்தேர்தலில் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறி வருகிறது. இதில் இரு தொகுதிகளில் மொகமா தொகுதியை ஆர்ஜேடி வென்றுள்ள நிலையில், கோபால்கஞ் தொகுதியை பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தக்க வைத்துக் கொண்டது.

தேர்தல் முடிவுகள்
இந்த இடைத்தேர்தலுக்கு பாஜக பெரியளவில் பிரசாரம் செய்தது. அதேநேரம், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் - நிதிஷ் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் இருவருமே நேரடியாகப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. மாறாகத் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஜேடி(யு) தலைவர் ராஜீவ் ரஞ்சன் இருவரும் தான் அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்












Click it and Unblock the Notifications