Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயோடு வாய் வைத்து.. குரங்கின் உயிரை காப்பாற்றிய பெரம்பலூர் இளைஞர்.. வைரல் வீடியோ..குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூரில் மயக்க நிலையில் இருந்த குரங்குக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Recommended Video

    வாயோடு வாய் வைத்து.. குரங்கின் உயிரை காப்பாற்றிய பெரம்பலூர் இளைஞர்.. வைரல் வீடியோ..குவியும் பாராட்டு

    சாலையோரத்தில் மனிதர்கள் உடல்நிலை முடியாமல் மயங்கி கிடந்தால் போதையில் விழுந்து கிடக்கிறார்கள் என தவறாக நினைத்து நெருங்காமல் போகும் உலகம் இது!. இந்த தவறான புரிதலால் எத்தனையோ உயிர்கள் பறி போயுள்ளன.

    அது போல் சாலை விபத்தில் அடிபட்டு கிடந்தாலும் அவர்களை காப்பாற்றாமல் போலீஸ், கேஸ் என வந்தால் என்ன செய்வது என அஞ்சி அப்படியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வீடியோ எடுக்கும் காலம் இது!

    விலங்குகள்

    விலங்குகள்

    இப்படிப்பட்ட உலகில் மனிதர்கள், விலங்குகள் என அடிப்பட்டாலும் இன்னலுக்குள்ளாகியிருந்தாலும் காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த பரபரப்பான சூழலிலும் சக மனிதர்கள் விலங்குகளுக்கு செவி கொடுத்து உதவும் வீடியோ வைரலாகி வருகிறது.

    38 வயது மதிக்கத்தக்க ஒருவர்

    38 வயது மதிக்கத்தக்க ஒருவர்

    38 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது மயக்கத்தில் இருந்த ஒரு குரங்கை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நமக்கென என செல்லாமல் , அதன் அருகே செல்கிறார். அப்போது குரங்கின் நெஞ்சை அழுத்தி அழுத்தி அதன் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்.

    மனிதர்கள்

    மனிதர்கள்

    இது போன்று சிகிச்சைகள் மனிதர்களுக்கு கொடுப்பர். அதே போல் நெஞ்சில் கை வைத்து அழுத்தி பார்த்தும் பலனிக்கவில்லை. இதனால் அவர் தளரவில்லை. மீண்டும் முயற்சிக்கிறார். அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து தனது மூச்சுக் காற்றை அதன் உள்ளே செலுத்துகிறார். உடனே குரங்கு உயிர் பிழைக்கிறது.

    அன்பு

    அன்பு

    இதனால் மகிழ்ச்சி அடைகிறார் அந்த நபர். குரங்கையும் ஒரு உயிராக நினைத்து அவர் பல முறை முயற்சித்தது அவர் அனைத்து ஜீவராசிகள் மேலும் வைத்துள்ள அன்பையே காட்டுகிறது. இந்த நபரை பலர் பாராட்டி வருகிறார்கள். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிறது வரலாறு. அப்படிப்பட்ட குரங்கிற்கு மறுபிறவியை மனிதன் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+