மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் தகனம்… புதுச்சேரி அரசு சார்பில் முழு மரியாதையுடன் தகனம்
புதுச்சேரி : புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சன் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.
மானுடம் வெல்லும், வானம் வசப்படும் என்ற இரட்டை நாவல்கள் மூலம் புதுச்சேரியின் பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்துடன் ஒட்டிய இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக்குறிப்புகளின் ஆதார அடிப்படையில் படைப்பிலக்கியமாக்கியவர் பிரபஞ்சன்.

இந்த நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சந்தியா உள்ளிட்ட பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஏராளமான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர் பிரபஞ்சன். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
அவரது உடல் புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டது. பேண்ட் வாத்தியங்கள் இசைக்க அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணிக்கு பிரபஞ்சன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு சன்னியாசி தோப்பு மயானத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
பின்னர் 21 குண்டுகள் முழங்க, பிரபஞ்சன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பிரபஞ்சன் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications