அதிகாலையில் வாக்கிங் போன லட்சுமி யானை..மயங்கி விழுந்து மரணம்..மணக்குள விநாயகர் கோவிலில் சோகம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி யானைக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. 1995 ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.
நான்கு கால்களிலும் கொலுசு அணிந்து ஜல் ஜல் என வலம் வரும் அழகை காணவே சிறுவர்களும், பக்தர்களும் வருவார்கள். யானை லட்சுமி பலருக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது.

யானை லட்சுமி
பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யானை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது.

யானை திடீர் மரணம்
தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர். உயிரிழந்த லட்சுமி யானைக்கு பட்டு சேலை போர்த்தியும் மலர்கள் தூவியும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி
25 ஆண்டுகளுக்கும் மேலாக மணக்குள விநாயகர் கோவிலில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த யானை திடீரென உயிரிழந்தது புதுச்சேரியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர். எங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல வலம் வந்த யானை மரணமடைந்தது மிகப்பெரிய இழப்பு என்று பக்தர்கள் கூறியுள்ளனர். யானை பாகன் உயிரிழந்த லட்சுமியின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறியது பலரையும்சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி
உயிரிழந்த யானை மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பக்தர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். யானை பாகனுக்கும் அவர் ஆறுதல் கூறினார். யானை லட்சுமி ஆசி வழங்கியது மட்டுமல்ல நம்மிடம் விளையாடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
இதனிடையே உயிரிழந்த லட்சுமி யானை அதிகாலையில் வாக்கிங் சென்ற போது மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உடல் நலம் குன்றியிருந்த யானை நடக்க முடியாமல் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த காட்சிகள் பதிவாகி உள்ளன.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications