Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Isha Singh: கண்களை விரித்து! கையை நீட்டி! புஸ்ஸி ஆனந்தை திட்டிய ஈஷா சிங்! புதுவை உள்துறை அமைச்சர் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பொதுக் கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை போர்த்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

தவெக பொதுக் கூட்டம் புதுவை உப்பளம் துறைமுகம் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த கூட்டத்திற்கு எஸ்.பி. ஈஷா சிங் சிறப்பாக பாதுகாப்பு வழங்கியிருந்தார்.

Isha Singhj TVK

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு 73 நாட்கள் கழித்து புதுவையில் தவெக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

இந்த பொதுக் கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்பட்டது. அது போல் கியூஆர் கோடுடன் கூடிய பாஸ் இருப்போருக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்பட்டது.

ஆனால் தவெக பொதுக் கூட்டத்தில் பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே விடுமாறு ஆனந்த் கூறிய போது கோபமடைந்த எஸ்பி ஈஷா சிங், "நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு சொல்லித் தருகிறீரா?" என ஆவேசமாக கேட்டார். மேலும் 40 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இவர் புஸ்ஸியை ஆவேசமாக கண்டித்துக் கொண்டிருந்த கேப்பில் உள்ளே நுழைந்தவர்களை பிடித்து வெளியே அனுப்பினார். அது போல் புஸ்ஸி ஆனந்த் கட்சியினர் மத்தியில் மைக்கில் பேசினார். அவர் பேசுகையில், "பொறுமையாக இருங்க எல்லாரையும் அனுப்புறோம்"னு சொன்னுதான் தாமதம், அவரிடம் இருந்து ஈஷா சிங் மைக்கை பறித்துக் கொண்டார்.

ஈஷா சிங், மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்தவர். இவர் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ்ஸாக தேர்ச்சி பெற்றார். 2014 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். கல்வி மேம்பாட்டிலும் நிர்வாகத் திறமையிலும் சிறந்தவர். இவர் டெல்லி, அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொறுப்புகளில் வகித்துள்ளார்.

குற்றத் தடுப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் தனது திறமையை காட்டினார். புதுவை எஸ்பியாக நியமிக்கப்பட்ட ஈஷா , பொதுக் கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், கூட்ட நெரிசல் உள்ளிட்டவைகளில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளார்.

விதிகளை மீறினால் அவர் அதை சகித்துக் கொள்ள மாட்டார். பெண்கள் பாதுகாப்பு, இரவு ரோந்துப் பணிகள், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

ஈஷா பெங்களூரில் 2018 ஆம் ஆண்டு சட்டம் படித்தார். தற்போது பொது நல வழக்குகளில் வழக்கறிஞராக வாதாடி வருகிறார். செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் பணியில் இறந்த ஊழியர்களின் மனைவிகளுக்கு தனது வாத திறமையால் வாதாடி ரூ 10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்தார். ஒரு அதிகாரியால் போலியாக ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பெண்ணுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் ஈஷா சிங். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நீதியை நிலைநாட்டும் வகையில் ஈஷா செயல்பட்டு வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+