மீனவர்களை இந்தியக் குடிமக்களாக மத்திய அரசு கருதவில்லை.. ராஜ்ய சபாவில் பேசவும் வாய்ப்பளிக்கவில்லை..வைகோ!
ராமநாதபுரம்: மீனவர்களை இந்தியக் குடிமக்களாக கூட மத்திய பாஜக அரசு கருதவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அண்மையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

முதல்வர் கடிதம்
இதனிடையே சில நாட்களுக்கு இலங்கை கடற்படை கைது செய்த இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ராமநாதபுரத்தில் வைகோ
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழக மீனவா்களைப் பற்றி பேசுவதற்கு கூட மத்திய அரசு வாய்ப்பு வழங்குவதில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியைச் சோ்ந்த மதிமுக நிா்வாகி இல்ல திருமண விழாவில் வைகோ கலந்துகொண்டார்.

தமிழக மீனவர்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இலங்கைக் கடற்படையினா், தமிழக மீனவா்களைத் தாக்குவதும், கைது செய்வதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 3 முறை மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட வாய்ப்பு அளிப்பது இல்லை.

வைகோ குற்றச்சாட்டு
மீனவா்களை இந்திய குடிமக்களாக மத்திய பாஜக அரசு கருதவில்லை. மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மீனவா்களை இந்திய குடிமக்களாகக் கருதாத நிலையே நீடிக்கிறது. மீனவா்களை பாதுகாப்பதில் மத்திய அரசு கடமையைச் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications