கோவில் திருவிழாவில் ஊ சொல்றியா மாமா! ரசிகர்கள் தொல்லையால் கடுப்பான ஆண்ட்ரியா! ”லேசான” தடியடிதானாம்
சேலம் : கோவில் திருவிழாவில் பாட வந்த நடிகை ஆண்ட்ரியாவை காண அதிகளவில் ரசிகர்கள் திரண்ட நிலையில் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
படத்தைவிட படத்தில் இடம்பெற்றிருந்த சமந்தா வேற லெவலில் கவர்ச்சி காட்டி நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பெரும் வெற்றி பெற்றது. ஆண்டிரியாவின் ஹஸ்கி வாய்ஸும், சமந்தாவின் கிறுக்கேற்றும் நடனமும் பாடலை உலக அளவில் கொண்டு சென்றது.

நடிகை ஆண்ட்ரியா
அதற்கு ஆண்ட்ரியா செல்லும் இடமெல்லாம் இந்த பாடலை பாட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தி கேட்கும் அளவுக்கு ட்ரெண்டானது. இந்நிலையில் சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்கள் ஆர்வம்
இந்தநிலையில் நடன நிகழ்ச்சியை காண்பதற்கு கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காத்திருந்தனர்.அப்பொழுது வெகு நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்ட்ரியா அவர்கள் வந்தார். அவரை காண அவரின் காரை சுற்றி நின்று கொண்ட ரசிகர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் தவித்த ஆண்ட்ரியாவை காவலர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மேடைக்கு அழைத்து வந்தனர். பின்பு மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர்.

ஆண்ட்ரியா கோபம்
அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான ஊ சொல்றியா மாமா பாடலைப் பாடிய நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் அளவில்லாமல் ஆர்ப்பரித்தது. பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்திய நிலையில் கடுப்பான ஆண்ட்ரியா கோபத்துடன் நின்ற அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாட சொல்வதாக கூற மற்றொரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடினார்.

லேசான தடியடி
அப்பொழுது ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமானதால் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி , நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று காவல்துறையினர் எச்சரித்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார். ஆண்ட்ரியாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications