Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவில் திருவிழாவில் ஊ சொல்றியா மாமா! ரசிகர்கள் தொல்லையால் கடுப்பான ஆண்ட்ரியா! ”லேசான” தடியடிதானாம்

Subscribe to Oneindia Tamil

சேலம் : கோவில் திருவிழாவில் பாட வந்த நடிகை ஆண்ட்ரியாவை காண அதிகளவில் ரசிகர்கள் திரண்ட நிலையில் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

படத்தைவிட படத்தில் இடம்பெற்றிருந்த சமந்தா வேற லெவலில் கவர்ச்சி காட்டி நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பெரும் வெற்றி பெற்றது. ஆண்டிரியாவின் ஹஸ்கி வாய்ஸும், சமந்தாவின் கிறுக்கேற்றும் நடனமும் பாடலை உலக அளவில் கொண்டு சென்றது.

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

அதற்கு ஆண்ட்ரியா செல்லும் இடமெல்லாம் இந்த பாடலை பாட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தி கேட்கும் அளவுக்கு ட்ரெண்டானது. இந்நிலையில் சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இந்தநிலையில் நடன நிகழ்ச்சியை காண்பதற்கு கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காத்திருந்தனர்.அப்பொழுது வெகு நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்ட்ரியா அவர்கள் வந்தார். அவரை காண அவரின் காரை சுற்றி நின்று கொண்ட ரசிகர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் தவித்த ஆண்ட்ரியாவை காவலர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மேடைக்கு அழைத்து வந்தனர். பின்பு மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர்.

ஆண்ட்ரியா கோபம்

ஆண்ட்ரியா கோபம்

அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான ஊ சொல்றியா மாமா பாடலைப் பாடிய நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் அளவில்லாமல் ஆர்ப்பரித்தது. பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்திய நிலையில் கடுப்பான ஆண்ட்ரியா கோபத்துடன் நின்ற அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாட சொல்வதாக கூற மற்றொரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடினார்.

லேசான தடியடி

லேசான தடியடி

அப்பொழுது ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமானதால் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி , நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று காவல்துறையினர் எச்சரித்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார். ஆண்ட்ரியாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+