Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏற்காட்டில் அசைவ விருந்துடன் மது.. முதல் முறை குடித்த இளைஞர் பலி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

ஏற்காடு: புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த சேலத்தை சேர்ந்த நபர் மது அருந்தி கொண்டிருந்தபோது மூச்சுத்திண்றல் ஏற்பட்டு பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய சந்தோஷ் உள்பட அவரது நண்பர்கள் புத்தாண்டை வரவேற்க அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்களை வாங்கியுள்ளனர். நள்ளிரவு புத்தாண்டு தொடங்கியதும் அனைவரும் மது அருந்தியுள்ளனர். சந்தோஷும் மது அருந்தியுள்ளார்.

ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடிக் கொண்டு இருந்த போது திடீரென சந்தோஷிற்கு மூச்சுத்திண்றல் எற்பட்டுள்ளது. அதே இடத்தில் சந்தோஷ் மயங்கி விழுந்து இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

நண்பர்களுடன் ஏற்காட்டு சென்ற சந்தோஷ்

நண்பர்களுடன் ஏற்காட்டு சென்ற சந்தோஷ்

சேலம் மாவட்ட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டியை சேர்ந்த அண்ணாமலையின் மகன் சந்தோஷ் (வயது 23). சந்தோஷ் இந்த ஆண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாட திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தனது நண்பர்கள் 9 பேருடன் அவர் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுவதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மலைப்பகுதிகளைக் கொண்ட பிரபலமான சுற்றுலாத்தளமான ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்க்ள் விடுதியிலேயே புத்தாண்டை கொண்டாட முடிவு செய்தனர்.

மது அருந்திய சந்தோஷ்

மது அருந்திய சந்தோஷ்

நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்று கொண்டாட வேண்டும் என்றும் அதற்காக மது பாட்டில்கள் மற்றும் அசைவ உணவுகளை தங்கியிருந்த தனியார் விடுதியில் வாங்கி வைத்துள்ளனர். புத்தாண்டு பிறந்தததும் நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட தொடங்கிய இளைஞர்கள் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். சந்தோஷும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அசைவ உணவுகளையும் சாப்பிட்டுக்கொண்டே மதுவை அருந்தியுள்ளனர்.

 திடீரென மூச்சுத்திணறல்

திடீரென மூச்சுத்திணறல்

ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடிக் கொண்டு இருந்த போது சந்தோஷிற்கு திடீரென மூச்சுத்திண்றல் எற்பட்டுள்ளது. அதே இடத்தில் சந்தோஷ் மயங்கி விழுந்து இருக்கிறார். இதைப்பார்த்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நண்பர்கள் பதறி போகினர். உடனடியாக் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சந்தோஷை அழைத்து சென்றனர். சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

முதல் முறையாக மது குடித்ததாக

முதல் முறையாக மது குடித்ததாக

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷின் நண்பர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. சந்தோஷ் முதல் முறையாக மது குடித்ததாகவும் இதனால், உடல் ஒத்துழைக்காமல் ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. உயிரிழந்த சந்தோஷூக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

ஜாலி என்ற பெயரில்

ஜாலி என்ற பெயரில்

புத்தாண்டு தினத்தை கொண்டாட சென்ற இடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் பலியானது அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுப்பதகா அமைந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும் வாகனத்தில் அதிவேகமாக செல்வதும் போன்ற செயல்களில் சில இளைஞர்கள் ஈடுபடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஜாலி என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது ஒரு சில நேரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீர்குலைத்து விடுவது போல் அமைந்துவிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+