Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து... அறைகள் தரைமட்டம் - 4 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இரண்டு அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

4 killed in an Explosion at Sivakasi firecracker factory

இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியலில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 4 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து என தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்துள்ள வருவாய் துறை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், வழிவிடு முருகன் என்பவரது பட்டாசு ஆலையில் அதிகளவு ஃபேன்சி ரக பட்டாசு தயாரிக்க மருந்து தயார் செய்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறினர். இந்த பட்டாசு ஆலை வழிவிடு முருகன் என்பவர் மூலம் நடத்தப்படுகிறதா, அல்லது வேறு சில ஒப்பந்தகாரர் மூலம் நடத்தப்படுகிறதா என விசாரணை நடைபெறுகிறது. முழு விசாரணைக்கு பின்பு தான் எத்தனை நபர் இறந்துள்ளனர். எத்தனை நபர்களுக்கு காயம் என தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.

ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+