இலங்கை: தமிழர் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்த கோவில் சிலைகள் உடைப்பு- பெரும் பதற்றம்
அக்கரபத்தனை: இலங்கையின் அக்கரப்பத்தனை பகுதியில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வந்த கும்பாபிஷேகம் நடைபெற இருந்த விநாயகர் கோவில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கோவில் சிலைகளை உடைப்பது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் லிந்துலை என்ற இடத்தில் தேவாலயத்தில் மாதா சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.

தற்போது அக்கரப்பத்தனை பகுதியில் விநாயகர் கோவில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இந்த சித்தி விநாயகர் ஆலயம் சீரமைக்கப்பட்டு ஜனவரி 19-ந் தேதி முதல் ஜனவரி 24-ந் தேதி வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது கோவிலின் வெளிபிரகாரத்தில் பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலைகளை உடைத்து எறிந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் கோவில் முன்பாக ஒன்று திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர், மத மோதல்களை ஏற்படுத்தவே விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கும்பாபிஷேகம் நடத்துவதில் குழப்பம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு இதனை செய்திருக்கின்றனர். இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications