மாயமான மலேசிய விமானமும், உக்ரைனில் சுடப்பட்ட விமானமும் ஒரே ரகத்தைச் சேர்ந்தது என தெரியுமா?
சென்னை: முதன்முதலாக 1997ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி சேவையை துவங்கிய மலேசிய விமானம் 17 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை 17ம் தேதி சுட்டுத்தள்ளப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் ரஷ்யா எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
இந்நிலையில் விமானம் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.

போயிங்
கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மற்றும் உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட எம்.ஹெச். 17 ஆகிய இரண்டுமே போயிங் 777-200 இஆர் ரகத்தைச் சேர்ந்தவை.

17 ஆண்டுகள்
எம்.ஹெச். 17 விமானம் 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விமானம் முதன்முதலாக 1997ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி சேவையை துவங்கியது. 17 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை 17ம் தேதி சுட்டுத்தள்ளப்பட்டுள்ளது.

தொடர்பு
விமானம் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு கிளம்பியது. ஆம்ஸ்டர்டாமில் இருந்து 12.15 மணிக்கு கிளம்பிய விமானத்தை 4 மணிநேரம் கழித்து தொடர்புகொள்ள முடியாமல் போனது.

33 ஆயிரம் அடி உயரம்
உக்ரைனில் சண்டை நடப்பதால் 32 ஆயிரம் அடிக்கு கீழ் விமானங்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசிய விமானம் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்ததும் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துள்ளது.

பயணிகள்
நெதர்லாந்தைச் சேர்ந்த 154 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 பேர், மலேசியாவைச் சேர்ந்த 23 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 6 பேர், ஜெர்மனியைச் சேர்ந்த 4 பேர், பெல்ஜியத்தைச் சேர்ந்த 4 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

ரஷ்யா
விமானம் ராடாரில் இருந்து மறைந்தபோது ரஷ்ய எல்லைக்குள் நுழைகின்ற போது ரஷ்யாவில் இருந்து 50 கிமீ தூரத்தில் தான் சுட்டுத் தள்ளப்பட்டது.

பக் ஏவுகணை
விமானம் ரஷ்யாவில் தயாரித்த பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பக் ஏவுகணை 72 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி கொண்டது.

பழிபோடுதல்
ரஷ்ய ராணுவ ஆதரவு தீவிரவாதிகள் விமானத்தை சுட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் சுட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

தவறுதலாக
உக்ரைன் விமானம் என்று நினைத்து ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகளோ அல்லது ரஷ்ய விமானம் என்று நினைத்து உக்ரைனோ சுட்டுத்தள்ளியிருக்க வேண்டும்.

பத்திரிக்கையாளர்
விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்தனர். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிமீ தொலைவில் ரஷ்ய தீவிரவாதிகள் பிடியில் உள்ள கிராமம் அருகே விமானம் விழுந்து நொறுங்கிக் கிடந்ததை பத்திரிக்கையாளர் ஒருவர் தான் முதலில் பார்த்துள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications