பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்: கருவைக் கலைக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பக்கத்து வீட்டுகாரர் மூலம் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமடைந்த சிறுமியின் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘' எங்கள் ஊர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது, கோயில் கல்வெட்டில் பெயர் சேர்க்கவில்லை எனக் கூறி சசிகுமார் என்பவர் என்னிடம் தகராறு செய்தார். தகராறின் போது என்னை பழிவாங்குவதாகக் கூறிச் சென்றார்.

இந்த நிலையில், 9ஆம் வகுப்பு படிக்கும் எனது 15 வயது மகளை கடந்த டிசம்பர் மாதம் சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், எனது மகள் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எனது மகளின் கருவை கலைக்குமாறு அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கோரினேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும், நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று வரவும் அறிவுறுத்தினர். எனவே, எனது மகளின் கருவைக் கலைக்க அரசு டாக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி உத்தரவு
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் என்.பொன்ராஜ் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
''மனுதாரரின் மகள், 13 வாரம் கருவுற்று இருப்பதாகவும், கருவைக் கலைப்பதற்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருக் கலைப்பு சட்டத்தின்படி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, அரசு டாக்டர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்தக் கருவை டாக்டர்கள் சட்டப்படி பாதுகாத்து வைக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications