குரங்கணி மீட்புப் பணியில் 16 கருடா படை வீரர்கள், 4 விமானங்கள்!
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கருடா காமாண்டோ படை வீரர்கள் 16 பேர் மற்றும் 4 இந்திய விமானப்படை விமானங்கள் இறங்கியுள்ளன.
Recommended Video

தேனி : தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கருடா காமாண்டோ படை வீரர்கள் 16 பேர் மற்றும் 4 இந்திய விமானப்படை விமானங்கள் இறங்கியுள்ளன.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் நேற்று 40 பேர் சிக்கினர். சென்னையை சேர்ந்த ஒரு குழுவும், திருப்பூரைச் சேர்ந்த ஒரு குழுவும் குரங்கணி பகுதியில் மலையேற்றத்திற்காக சென்றுள்ளனர்.

நேற்று மலையில் இருந்து கீழே இறங்கும் போது திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அஞ்சி சிதறியோடியுள்ளனர் மலையேற்றம் சென்றவர்கள். காட்டின் மேல்பகுதியில் எந்த தொலைதொடர்பு சாதனமும் இல்லாத நிலையில் கைடு ஒருவர் கீழே வந்து ஊர் மக்களை அழைத்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.
இதனால் இரவு நேரத்தில் தான் தீ விபத்து செய்தி கிடைத்ததால் மீட்புப் பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மீட்புப் பணிக்காக வந்த இந்திய விமானப்படையின் விமானமும் வெளிச்சம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இது வரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீட்புப் பணியில் கருடா கமாண்டோ படை வீரர்கள் 16 பேர் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று இந்திய விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும் நேரடியாக சுற்றுலா சென்றவர்கள் இடத்திற்கு சென்றடைய முடியாத நிலையில் மலையடிவாரம் சென்று அங்கிருந்து வீரர்கள் நடைபாதையாக 4 மணி நேரம் பயணித்து அதன் பிறகே தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு அதன் பின்னர் அவர்களை மீண்டும் ஹெலிகாப்டருக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications