2,500 டாஸ்மாக் ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றம்: பட்டியல் தயாரிப்பு
நெல்லை: தமிழகத்தில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்காக சீனியரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் வசம் இருந்த டாஸ்மாக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டப்படிப்பு படித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் விற்பனையாளர்களாகவும் சுமார் 32 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை வைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன. முதலில் மதுவிலக்கு சாத்தியமில்லை என கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார். அதன்படி மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் முதல் கட்டமாக மூடப்படுகின்றன.
இந்நிலையில் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் 500 சூப்பர்வைசர்கள், 2 ஆயிரம் விற்பனையாளர்களை மற்ற துறைகளுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பட்டதாரிகள் ஆசிரியர்கள் பணியிடத்திற்கும், விற்பனையாளர்கள் வருவாய் துறை உள்ளிட்ட வேறு துறைக்கும் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதற்காக சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து திருத்தம் செய்ய வேண்டியதிருப்பின் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மேலாளரை சந்தித்து திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஏற்கனவே
வேலையில்லாமல் அரசு போட்டி தேர்வை எதிர்கொண்டு வரும் பட்டதாரிகளும், பள்ளி இறுதி படிப்பை படித்தவர்களும் விரக்தியில் உள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications