2,500 டாஸ்மாக் ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றம்: பட்டியல் தயாரிப்பு
நெல்லை: தமிழகத்தில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்காக சீனியரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் வசம் இருந்த டாஸ்மாக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டப்படிப்பு படித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் விற்பனையாளர்களாகவும் சுமார் 32 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை வைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன. முதலில் மதுவிலக்கு சாத்தியமில்லை என கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார். அதன்படி மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் முதல் கட்டமாக மூடப்படுகின்றன.
இந்நிலையில் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் 500 சூப்பர்வைசர்கள், 2 ஆயிரம் விற்பனையாளர்களை மற்ற துறைகளுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பட்டதாரிகள் ஆசிரியர்கள் பணியிடத்திற்கும், விற்பனையாளர்கள் வருவாய் துறை உள்ளிட்ட வேறு துறைக்கும் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதற்காக சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து திருத்தம் செய்ய வேண்டியதிருப்பின் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மேலாளரை சந்தித்து திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஏற்கனவே
வேலையில்லாமல் அரசு போட்டி தேர்வை எதிர்கொண்டு வரும் பட்டதாரிகளும், பள்ளி இறுதி படிப்பை படித்தவர்களும் விரக்தியில் உள்ளனர்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications