காணும் இடமெங்கும் வெள்ளநீர்... 2015 நவம்பர் இரவு மீண்டும் கண்முன் வருதே! #chennaifloodtrap
கனமழையால் சென்னையில் காணும் இடமெங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சென்னை: விடாமல் கொட்டி வரும் மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் ஆறுகளாக மாறி ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அலுவலகம் முடிந்து வாகனங்களில் வீடு திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியும், டிசம்பர் 1ஆம் தேதியும் இதுபோல ஒரு மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர் சென்னை வாசிகள்.
வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நடந்தே சென்றனர் அதே போல நிலை நவம்பர் 1ஆம் தேதியன்று இரவில் ஏற்பட்டுள்ளது. வீடு திரும்ப முடியாமல் தவித்து வரும் பலரும் தங்களின் தவிப்பை ஃபேஸ்புக், ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
|
வெள்ளத்தில் தவிக்கும் மேற்கு மாம்பலம்
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

குப்புற விழுந்து ஓடினேன்
ஓடினேன் ஓடினேனு நங்கநல்லூரில் இருந்து யூ டர்ன் அடிச்சு, குரோம்பேட்டை மழைல குப்புற விழுந்து, ட்ரிப்ளிகேன் குண்டு குழி வழியா நான் கேளம்பாக்கமே வந்து சேர்ந்துட்டேன் மூணு வருஷ மழைல..ஆட்சியாள பெருமக்களே, ஆனா நீங்க மூணு வருஷ மழைக்கப்புறம் அப்படியே இருக்கீங்க பாருங்க...நல்லாவே இருங்கடா
|
ஞாபகம் வருதே
தி.நகரில் காரில் சென்று கொண்டே படம் பிடித்துள்ள இவர், 2015ஆம் ஆண்டு மழையை நினைவு படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
|
வாட்டர் டேங்க் ரோடு
இது 2015ல் எடுக்கப்பட்ட படம். இப்போதும் கூட இது பொருத்தமாகத்தான் உள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
சாரை சாலையாக வாகனங்கள்
வெள்ளநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் சாந்தோம் முடங்கியுள்ளது என்பதை வாகனத்தில் சென்ற ஒருவர் படம் பிடித்து பதிவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications