தூத்துக்குடியில் பரவும் டெங்கு - 24 பேர் பாதிப்பு என டீன் ஓப்புதலால் மக்கள் பீதி
தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக டீன் கூறியிருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை டீன் கூறியிருப்பது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டீன் சாந்தகுமார் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக குறைந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே உயிர் இழந்துள்ளனர். இவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கடைசி கட்டமாகதான் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 21 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
இன்று 5ம் தேதி கொசு ஓழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் அந்தந்த பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை தலைவரே டீனே டெங்கு காய்ச்சல் இருப்பதாக ஒப்புக் கொண்டதால் மக்கள் பயத்தில் உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications