சென்னை விமானநிலையத்தில் 50கி மருத்துவ ‘சிப்பி’ கடத்த முயன்ற கூலித் தொழிலாளி கைது
சென்னை: அரசு தடை விதித்துள்ள அரியவகை மருத்துவ சிப்பிகளை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற கூலித் தொழிலாளியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தின் பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த பைசல் அகமது (40) என்பவரிடமிருந்த அட்டைபெட்டி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அட்டைப் பெட்டியை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதன் உள்ளே, அரிய வகை கடல் சிப்பிகள் சுமார் 50 கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
மருத்துவ குணம் நிறைந்த, இந்த சிப்பிகளை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக அவற்றைக் கடத்த முயன்றதாக பைசலின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பைசல் அகமதுவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், சிப்பிகளை கூலிக்காக எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தச் சிப்புகளை பைசலிடம் கொடுத்து கடத்தச் சொன்னது யார், சிங்கப்பூரில் இவற்றை வாங்க இருந்த கும்பல் எது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications