கோவை டயர் உருக்கு ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: உடல் கருகி 6 பேர் பலி
கோவை: கோவை அருகே டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் தீக்காயம் அடைந்த 6 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் - கள்ளப்பாளையம் சாலையில் ஓரட்டுக்குப்பை என்ற இடத்தில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பா.செந்தில் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ நாகலட்சுமி பைரோலிசிஸ் கம்பெனி இயங்கி வருகிறது.

பழைய டயர்களை துண்டு துண்டாக வெட்டி கொதிகலனில் வைத்து உருக்கி பைரோலிசிஸ் என்ற ஆயில் வெளியே எடுக்கும் பணி, அந்த ஆலையில் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஆயில், தார் சாலை போடுவதற்கும், இரும்பு உருக்குக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த ஆலை இயங்கி வருகிறது. ஆலையின் மேலாளர், மேற்பார்வையாளர் உட்பட 10 பேர் பணிபுரிந்தனர். இவர்களில் 8 பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். துண்டாக்கப்பட்ட பழைய டயர்களை கொதிகலனுக்குள் சென்று வைத்து சூடுபடுத்தி ஆயிலை வெளியே எடுப்பதற்கு தேவையான வேலைகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி கொதிகலனின் மிக அருகாமையில் மேற்குவங்க மாநிலம் அல்புரிதர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோ.சரோஜ், 23, அ.தருண் ,20, அ.குணால், 19, சு.பிர்ஜூன், 20, சி.ப்ரீத்தம், 25, தே.விகாஸ்,19 ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அப்போது, காலை 11 மணியளவில் கொதிகலன் வெடித்து ஒரு கதவின் வழியாக சூடான அனல்காற்று, தீப்பிழம்பு, புகையுடன் கூடிய கரி ஆகியவை வெளியேறி பணியில் இருந்த தொழிலாளிகள் மீது பட்டுள்ளது.
இதில், 6 பேரின் உடல்களும் கருகின. இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் நூறு சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாகவும், 6 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களிடம் கோவை 2-வது குற்றவியல் நடுவர் ராஜ்குமார் வாக்குமூலம் பெற்றார். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலைக்கான உரிமம் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆலையின் உரிமையாளர் செந்தில், அவரது தந்தை பாலகுரு, மேற்பார்வையாளர் கெளதம் ஆகியோர் மீது பாதுகாப்பு குறைவாக ஆஜாக்கிரதையாக ஆலையை இயக்கி, மற்றவர்களுக்கு கொடுங்காயங்கள் ஏற்படுத்தியதாக 285 மற்றும் 337 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றுவந்த 4 பேர் நேற்றிரவு இறந்தனர். இன்று மாலையில் 2 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆலையின் உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தீக்காயமடைந்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications