தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர்: டிஜிபி அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர் என்று டிஜிபி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, நடைபெற்ற வன்முறையில் 72 போலீஸார் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீதும், காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறை டிஜிபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், போராட்டம் நடைபெற்ற நாளின் வன்முறையாளர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களை ஒடுக்கவே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்தப் போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications