ஓபிஎஸ் அணிக்கு தாவ ரெடியாகும் 98 எம்.எல்.ஏக்கள்? மீண்டும் அரங்கேறுமா கூவத்தூர் கூத்து??
ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறும்; அப்போது ஓபிஎஸ் அணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் தாவுவார்கள் என மாஜி எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ள தகவல் பெரும் பரபர
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூரை சந்திக்கும்; அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் தாவுவர் என முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி பரபர தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுக்காக... அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் வெல்லப் போகும் அணியே உண்மையான அதிமுகவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

திமுக, பாஜகவுக்கு நெருக்கடி
அதேபோல் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் திமுகவும் இருக்கிறது. அதேபோல கணிசமான வாக்குகளை பெற முடியுமா என ஆழம் பார்க்கிறது பாஜக.

பெரிய சதி
இதனிடையே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி கூறியதாவது: ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க பெரிய சதியே நடக்கிறது. ஒரு கலவரத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

மீண்டும் ஒரு கூவத்தூர் வரும்
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பணத்தை வாரி இறைத்து வருகிறார். என்னதான் நடந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழகம் ஒரு கூவத்தூரை சந்திக்கும்.

ஓபிஎஸ் அணியில் 98 எம்.எல்.ஏக்கள்
அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் 98 எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். ஏன் திமுகவில் உள்ள முன்னாள் அதிமுகவினர் கூட எங்கள் பக்கம் வரக் கூடும்.
இவ்வாறு கே.சி. பழனிச்சாமி கூறினார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications