ஆடிக்கிருத்திகை: முருகன் ஆலயங்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்
சென்னை: ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
வியாழக்கிழமையான இன்று ஞானகுரு என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகை விழா. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
வடபழனி தண்டாயுதபாணி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேர்த்திக்கடன்
ஆடிக்கிருத்திகையையொட்டி, ஆண்களும், பெண்களுமாக, 5 வயதில் இருந்து 60 வயது நிறைந்தவர்கள் வரையில், புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும், அரோகரா முழக்கமிட்டு, முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

காத்திருந்த பக்தர்கள்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, வடபழனி பகுதியே திக்குமுக்காடிப் போனது. நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை கண்குளிர தரிசனம் செய்தனர்.

காவடி எடுத்த பக்தர்கள்
அரோகரா கோஷங்கள் முழங்க, பக்தர்கள் காவடி எடுத்தும் பால் குடங்கள் ஏந்தியும் ஆடிப்பாடி வந்து, முருகக் கடவுளைத் தரிசித்தனர். இதேபோல், திருச்சி, கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் - பழனி
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழனியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அரோகரா முழக்கம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷங்களுடன் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

வல்லக்கோட்டை முருகன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்துக்கு அருகில் உள்ள வல்லக்கோட்ட ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, இன்று காலை ஆடிக் கிருத்திகை விழாவும் பூஜையும் விமரிசையாக நடைபெற்றன.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications