ஜெயலலிதா சிலைன்னு சொல்லி காந்திமதி சிலையை வச்சிருக்காங்க.. கிண்டலடிக்கும் தங்கதமிழ்ச்செல்வன்!
ஜெயலலிதா சிலை எனக்கூறி காந்திமதி சிலையை வைத்திருப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் கிண்டலடித்துள்ளார்.
Recommended Video

தேனி: ஜெயலலிதா சிலை எனக்கூறி காந்திமதி சிலையை வைத்திருப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் கிண்டலடித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை கடந்த 24 ஆம் தேதி அவரது பிறந்தநாளில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது.
ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன. தலைவர்கள் பலரும் அதையே குறிப்பிட்டனர்.

ஓயாத சர்ச்சை
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால் சிலை குறித்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

கடமைக்கு சிலை
இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசரப்பட்டு கடமைக்கு ஜெயலலிதாவுக்கு சிலை வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

காந்திமதி சிலை
ஜெயலலிதா சிலை என்ற பெயரில் நடிகை காந்திமதி சிலையை திறந்து வைத்து உள்ளனர் என்றும் அவர் கிண்டலடித்தார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்தவுடன் உண்மையான ஜெயலலிதா சிலை வைக்கப்படும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கேள்விக்குறியாகிவிடும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையான 205 டி.எம்.சி. தண்ணீரை 5 வாரத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் தமிழகத்தின் விவசாயமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
-
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications