இந்தியாவிலேயே அறிவுக்கூர்மை மிக்க தலைவர் கருணாநிதி.. 94 வயது நண்பரை வாழ்த்திய 95 வயது அன்பழகன்!
அகில இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல மிகச்சிறந்த தலைவர் இல்லை என்று பேராசிரியர் அன்பழகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: நேரு, அண்ணாவிற்குப் பிறகு அகில இந்தியாவிலேயே அறிவுக்கூர்மை மிக்க தலைவர் கருணாநிதி என்று பேராசிரியர் அன்பழகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சட்டசபை வைரவிழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, எம்.பி டெரிக் ஓ பிரையன், மஜீத் மேமன் உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசினர்.

தேசிய தலைவர்கள் வாழ்த்தி பேசிய பின்னர் கருணாநிதியுடன் அரசியலில் தொடர்ந்து நண்பரும் திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
94 வயதாகும் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் 95 வயதான பேராசிரியர் அன்பழகன் பேசியதுதான் ஹைலைட்.
பெரியார் காலம் தொடங்கி அரசியலில் தங்களின் மலரும் நினைவுகளை மேடையில் பேசினார். இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதியைப் போல ஒரு தலைவரை பார்த்ததேயில்லை என்றார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல தலைவர் இல்லை என்றார்.
நேரு, அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய அறிவுக்கூர்மை கொண்ட தலைவர் கருணாநிதி. அண்ணாவை விட மிகப்பெரிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்றார்.
95 வயதானாலும் நண்பர், தலைவர் கருணாநிதியைப் பற்றி பேசிய போது சற்றே நா தழுதழுக்க பேசி முடித்தார் பேராசிரியர் அன்பழகன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications