செம்மரக் கடத்தல் ஜூஜூபி.. காவிரியை சூறையாடும் மாபியாக்கள்.. காத்திருக்கும் கிராமத்தினர்!
மணல் மாஃபியாக்களின் வருகைக்காக காவிரி கரை கிராம மக்களே காத்திருக்கிறார்கள்.
Recommended Video

பரமத்தி வேலூர்: நம்ம ஊரில் என்னைக்கு அள்ள வருவாங்களோ? என மணல் கொள்ளையர்களுக்காக காத்திருக்கின்றன காவிரி கரை கிராமங்கள். மணல் கடத்துவதற்காக கிராம மக்களுக்கு அள்ளித் தரும் பணம்தான் இப்படி அந்த மக்களை ஏங்க வைத்திருக்கிறது.
மோகனூர் முதல் கொத்தமங்கலம் வரையிலான காவிரி மணல் சில மாஃபியாக்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இரவோடு இரவாக மணலை கிராமம் கிராமமாக அள்ளிக் கொண்டிருக்கிறது இந்த மாஃபியா கும்பல்.

காவிரி மணல் கடத்தலில் இறங்குபவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை கூலியாக தருகின்றனர். டூ வீலரில் ஒரு நடைக்கு 3 அல்லது 4 மூட்டைகள்.. இப்படி சில மணிநேரங்களில் ஒருநபர் 30 முதல் 40 மூட்டைகளை கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்.
40 மூட்டை மணலை திருடிக் கொடுத்தால் ரூ2,000 கூலி. குடும்பத்தில் உள்ள 5 பேரும் மணல் கொள்ளைக்குப் போனால் ஒருநாளைக்கு ரூ10,000. இந்த மணல் கடத்தல் தொழிலுக்கு தொடர்ந்து போனால் சில லட்சங்களை கண்ணில் பார்த்துவிடுகிறார்கள்.
இருக்கிற கடனையும் அடைத்துவிட்டு கையில் கொஞ்சம் தொகையையும் வைத்துக் கொள்கின்றனர். விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தைவிட குறுகிய காலத்தில் நிறைய பணம் கிடைத்துவிடுகிறது.
கூலியாகவே இவ்வளவு தொகை கொடுக்கிறார்கள் எனில் மாஃபியாக்களுக்கான வருமானம் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
செம்மரக் கடத்தலைவிட மிஞ்சுகிற தொழிலாகிவிட்டது காவிரி மணல் கொள்ளை. இதனால் என்றைக்கு நம்ம ஊருக்கு மணல் அள்ள வருவாங்க? என அப்பாவிகள் ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications