அப்பல்லோ பிள்ளையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம்.. ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது எப்போ?
அப்பல்லோவில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானதால் அதிமுகவினர் ஜெயலலிதாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
சென்னை : அப்பல்லோ மருத்துவமனைவளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலில், இன்று காலை 6 மணிமுதல் 7 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 47 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படுக்கையில் இருந்தபடி, சிகிச்சை பெற்றுள்ளதால், கை, கால்களை அசைக்க, பிசியோதெரபி சிகிச்சை தரப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த மாதமே திட்டமிட்டிருந்தது. முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது எப்படி என்று மருத்துவமனை நிர்வாகம் யோசிக்கவே, இதைப்பற்றி கேள்விப்பட்ட சசிகலா, நல்லகாரியத்தை நிறுத்த வேண்டாத் நீங்க கும்பாபிஷேகம் நடத்துங்கள் எனச்சொல்லி நிதியும் கொடுத்தாராம். இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும், அங்கிருந்து சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது கோவில் கும்பாபிஷேகமும் முடிந்து விட்டதால் ஜெயலலிதா வீடு திரும்புவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications