மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு - நெல்லையில் மோட்டர் ஓர்க்ஷாப்கள் மூடல்
நெல்லை: மத்திய அரசு புதிய சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறையை அமுல்படுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் அனைத்து மோட்டார் வாகன பழுது பார்க்கும் கடைகளும் ஒருநாள் மூடப்பட்டது
மத்திய அரசு சமீபத்தில் புதிய சாலை பாதுகாப்பு விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது. பழுது பார்க்கும் பணிமனைகளில் நவீன வசதிகள் இருக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு அனுமதி கிடையாது. மேலும் வாகனங்களுக்கு ஓரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே போட வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கையும், சிறை தண்டனையும் உறுதியாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
இது வாகன பழுதுபார்க்கும் கடைகளை நடத்துபவர்களை பாதிக்கும் என்பதால் இந்த சட்டத்தை அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி நெல்லை அனைத்து மோட்டார் தொழிலாளர் பாதுகாப்பு நல சங்கத்தினர் ஓருநாள் உண்ணாவிரதத்தில் இருந்தனர்.
நெல்லை ஜவஹர் மைதானததில் இதற்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், மத்திய அரசின் புதிய பாதுகாப்பு சட்டப்படி, நவீன வசதிகள் இல்லாத பணிமனைகளை நடத்த அனுமதி கிடையாது. அனைத்து வாகனங்களையும் டீலர்களிடமே பழுது பார்க்க வேண்டும். ஓரிஜினல் உதிரி பாகங்களை தவிர்த்து பிற கம்பெனிகளின் உதிரி பாகங்களை மாற்றினாலும், விற்பனை செய்தாலும் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இதில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் அம்சங்களை நீக்க வேண்டும்.
இந்த தொழில் செய்யும் பலர் அடிப்படை கல்வியோடு படிப்பை நிறுத்தி விட்டு இளம் வயதிலேயே இந்த தொழிலுக்கு வந்து விட்டனர். இதனால் பலர் இந்த தொழிலில் அனுபவம் வாயந்தவர்களாக உள்ளனர். இந்த சட்டத்தை அமுல்படுத்தினால் சிறிய மோட்டார் தொழிலாளர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்படும். இதனை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் சுமார் 4000 ஓர்க் ஷாப்புகள் இயங்கவில்லை என்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை பகுதியில் பெரும்பாலான பழுதுபார்க்கும் நிலையங்கள் மூடப்படடிருந்தன. இதனால் பலர் பஞசர் ஓட்டுவதற்காகவும், பிற உதிரி பாகங்கள் மாற்றுவதற்கும் மோட்டார் சைக்கிளை தள்ளியபடியே அலைந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications